districts

img

நல்ல பேச்சாளராக தொடர்ந்து புத்தகங்களை வாசிக்க வேண்டும்

விருதுநகர், ஏப்.8- ‘நல்ல பேச்சாளராக தொடர்ந்து புத்தகங்களை  வாசிக்க வேண்டும்’  என  சிறுபான்மையினர் ஆணை யம் சார்பில் நடைபெற்ற  பேச்சுப்போட்டியை துவக்கி வைத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பேசினார்.  விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லூரியில்  மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற் றது. விருதுநகர் சட்டப் பேரவை உறுப்பினர் சீனி வாசன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். அப்போது ஆட்சியர் பேசுகையில், கடந்த ஒரு நூற்றாண்டை எடுத்துக் கொண்டால், மிகச் சிறந்த  பேச்சாளர்கள்தான் தலை வர்களாக இருந்திருக்கி றார்கள். குடும்பத்தில் கூட பேச்சின் ஆற்றல் மிக முக்கி யமானதாகும். சிறந்த பேச்சு ஒருவரது வாழ்வையே மாற்றக் கூடிய சக்தி படைத்தது. உலகில்  ராஜதந்திரத்தில் மிக முக்  கிய பங்கு வகிப்பது, தேர்ந் தெடுத்து பயன்படுத்தும் வார்த்தைகள் தான். ஒரே கருத்தை நேர்மறை யாகவோ எதிர்மறையாக வோ சொல்லலாம். சொல் லைத் தேர்ந்தெடுத்து பேசு வதுதான் தனிமனித வாழ்க் கையின் வெற்றி. ஆழ்ந்த கருத்துக்களோ டும், சிந்தனையோடும் பேச வேண்டும். இந்த  சமுதா யத்தை உங்கள் பேச்சு மூலம் ஒரு அங்குலமாவது முன் னேற்ற வேண்டும் என தெரி வித்தார். இப்போட்டியில் 27 கல் லூரிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங் கேற்றனர்.