திருவில்லிபுத்தூர் நகராட்சி சுகாதார துறை, தியாகராஜா மேல்நிலைப் பள்ளி நாட்டு நல பணி திட்டம் சார்பில் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை நகராட்சி சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். முகாமில் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சிந்தியா தலைமையிலான குழுவினர் பணியாளர்களை பரிசோதனை செய்தனர்.