திருப்பூர், ஜன. 12 - திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முன்பாக, தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளு னர் சங்கத்தின் சார்பாக, காலி மருந்தாளுநர் பணியிடங் களை நிரப்ப வலியுறுத்தி வியா ழக்கிழமை பிற்பகல் ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மருந்தாளுநர் சங்கத்தின் நிர்வாகி ராமலிங் கம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத் தைத் தொடக்கி வைத்து மாநிலச் செயலா ளர் வல்லவன், கோரிக்கைகளை விளக்கி மாநிலச் செயலாளர் க.இளங்கோ ஆகியோர் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம், கிராம சுகாதார செவிலியர் சங்க மாநிலத் துணைத் தலை வர் ஏ.ராணி, மருத்துவத் துறை நிர்வாக அலு வலர் சங்க மாநிலப் பொறுப்பாளர் அந் தோணி ஜெயராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.ராமன் ஆகியோர் பேசினர். மாவட்டப் பொறுப்பா ளர் எஸ்.ஐயப்பன் நன்றி கூறினார்.