பத்தனம்திட்டா, பிப். 9- அடூர் கருவாட்டா அருகே கால்வாயில் கார் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். நான்குபேர் கடுகாயம் அடைந்தனர். கொல்லம் ஆயூர் இளமாடு காஞ்சிரத் தும்மூடு வீட்டில் வசிக்கும் சகுந்தலா, ஸ்ரீஜா, இந்திரா ஆகியோர் உயிரிழந்தனர். காரில் ஏழு பேர் இருந்தனர். மற்ற நான்கு பேரை யும் அப்பகுதி மக்களின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கொல்லத்தில் இருந்து ஹரிப்பாட் நோக்கி சென்று கொண்டிருந்த காரில் இரண்டு ஆண்களும் ஐந்து பெண்களும் இருந்தனர். கார் கால்வாயில் விழுந்து பாலத்தின் அடியில் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டன. கயிறு கட்டி காரை இழுத்து மீட்ப பணி மேற்கொள்ளப்பட்டது.