சிபிஎம் புதிய கிளை அமைப்பு
அருப்புக்கோட்டை, டிச.20- அருப்புக்கோட்டை அருகே உள்ள சுக்கிலநத்தம் காலனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கிளை அமைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியகுழு உறுப்பினர் எம்.காமாட்சி நாதன் தலைமையேற்றார். கிளையின் செயலாளராக ஆர். பார்த்தீபன் தேர்வு செய்யப்பட்டார். இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் எம்.கணேசன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
கருவை கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் -கணவர் கைது
தேனி, டிச.20- கம்பம் அருகே கருவை கலைக்க சொல்லி மனைவி யை மிரட்டிய கணவரை பாளையம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் கம்பம் அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் முத்துலட்சுமி(22). நர்சிங் படித்து முடித்துள்ள இவர் கம்பத்தில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இவரும் போடி அருகில் உள்ள வாழை யாத்துப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் பாண்டியன் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி சுருளி யில் கோடிலிங்கம் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு முத்துலட்சுமியுடன் பாண்டியன் நெருக்கமாக இருந்துள்ளார். இந்நிலை யில் அவர் 5 மாத கர்ப்பிணியானார். இதனால் தன்னை முறைப்படி திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு அழைத்துச்செல்லுமாறு கூறினார். ஆனால் பாண்டியன் திருமணத்திற்கு மறுத்துள்ளார். மேலும் அவரது குடும் பத்தினரும் பாண்டியனை மறந்துவிடும்படியும், கருவை கலைத்துவிடும்படியும் மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பாண்டி யனை கைது செய்தனர். அவரது தந்தை ஈஸ்வரன், தாய் ஈஸ்வரி, சித்தி வசந்தி, பெரியம்மா செல்வி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி நீராட்ட உற்சவம்
திருவில்லிபுத்தூர், டிச.20- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வரும் 23 தேதி மாலை 5 மணிக்கு பகல் பத்து எனும் திரு மொழி திருநாள் அன்று ஆண்டாள் தன்னை கண்டெடுத்த பெரி யாழ்வார் வீட்டிற்கு ரங்க மன்னருடன் சென்று பச்சை காய்கறிகளை பார்த்து உவகை அடையும் நிகழ்ச்சி பச்சை பரப்பலும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து பத்து நாட்கள் ஆண்டாள் ரங்க மன்னார் வீதி உலா நடைபெறு கிறது. மேலும் இதன் முடிவில் 2.1.2023 திங்கள்கிழமை காலை 6:30 மணிக்கு வைகுண்ட ஏகாதசி எனும் பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது .இதனை தொடர்ந்து இராபத்து எனும் திருவாய்மொழி திருநாள் உற்சவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஏற்பாடுகள் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் வீடு இல்லாதோர் கணக்கெடுப்பு பணிக்கு கால நீட்டிப்பு செய்திடுக!
மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல் விருதுநகர், டிச.20- விருதுநகர் மாவட்டத்தில் வீடு இல்லா தோர் கணக்கெடுக்கும் பணிக்கான காலத்தை நீட்டிப்பு செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செய லாளர் கே.அர்ஜுனன் மாவட்ட ஆட்சிய ருக்கு கடிதம் அனுப்பியுள்ளார், அதில் கூறி யதாவது: விருதுநகர் மாவட்டத்தில் வீடில்லாத வர்கள் எத்தனை பேர் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் கணக்கெடுப்பு செய்வ தாக அறிவித்துள்ளார், அப்பணி டிசம்பர் 7 முதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. மாவட்டம் முழுவதும் பல்லாயிரக்க ணக்கானோர் வீடு இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர், மேலும் பல இடங்களில் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக சேர்ந்து வசித்து வருகின்றனர், எனவே. அவர்களை எவ் வித விடுபடுதலும் இல்லாமல் முழுமையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவ சியமாகும். அதேவேளை, இந்த கணக்கெடுக்கும் பணியானது, வரும், டிசம்பர் 31 ஆம் தேதிக் குள் முடிக்கவும்,இதுகுறித்து ஆய்வு செய் யும் பணி வரும் ஜனவரி 9 ஆம் தேதிக்குள் ளும், பட்டியலை இறுதி செய்யும் பணி ஜன வரி 17- க்குள்ளும் முடிக்க திட்டமிடப்பட்டுள் ளது. மேலும், இறுதி செய்யப்பட்ட பட்டியல் ஜனவரி 18- 25 வரை அந்தந்த கிராம ஊராட்சி அலுவலகங்களில் பொது மக்கள் பார் வைக்கு வைக்கப்படும் எனவும், இது குறித்த தீர்மானம் குடியரசு தினத்தன்று அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை சட்டத்தில் நிறைவேற்றப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்தக் குறுகிய காலக்கெடு வுக்குள் அனைத்து வீடுகளையும் கணக்கெ டுக்கும் பணி முறையாக நடைபெறுமா என்ற கேள்வி எழுகிறது. மேலும், இந்தக் கணெக்கெடுக்கும் பணி யில் கிராம ஊராட்சித் தலைவர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர், சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பின் பிரதிநிதி ஆகிய 5 பேர் கொண்ட குழு செயல்படும் எனவும் அறிவிக்கப்பட் டுள்ளது, இதில். கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர் ஆகியோர் ஏற்க னவே கடுமையான வேலைப் பளுவுடன் பணியாற்றி வருகின்றனர், எனவே, இக்குழு வினர், இந்தக் குறுகிய கால இடைவெளி யில் கணக்கெடுப்புகளை முறையாக எடுப் பது நடைமுறையில் இயலாத காரியமா கும் என கருதுகிறோம். இந்தநிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நரிக்குடி, எம்.ரெட்டியபட்டி ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வீடு இல்லாத 400க்கும் மேற்பட்டோரரைத் திரட்டி வீடுகள் வழங்கக் கோரி மனுக் கொடுத்துள்ளனர். இவற்றையும் கணக்கில் இணைத்து வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனையும் வீடு கட்ட நிதியும் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். மேலும், விருதுநகர் மாவட்டத்தில் வீடு இல்லாதோர் கணக்கெடுக்கும் பணிக்கான காலத்தை நீட்டிப்பு செய்திட வேண்டும். இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவித் துள்ளார்.
சாலை ஆய்வாளர்களை பணியாளர்களாக பதவி இறக்கம் செய்தது செல்லாது
உயர்நீதிமன்றம் தீர்ப்பு
விருதுநகர், டிச.20- தமிழகத்தில் சாலைப் பணியாளர் களாக பணியில் சேர்ந்து பின்பு விதிமுறை யின் அடிப்படையில் சாலை ஆய்வாளர் களாக பதவி உயர்வு பெற்றர்வகளை நெடுஞ்சாலைத்துறை நிர்வாகமானது திடீரென பதவி இறக்கம் செய்து மீண்டும் சாலைப் பணியாளர்களாக அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து சாலை ஆய் வாளர்கள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசா ரித்த நீதிமன்றம், சாலை ஆய்வாளர்களை பதவி இறக்கம் செய்தது செல்லாது என அதிரடியாக தீர்ப்பளித்தது. தமிழ்நாடு அரசு பணியில் 10 ஆம் வகுப் புக்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்று பலர் பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருகின்றனர். அதில் சிலர் உயர் பதவி வரை சென்றுள்ளனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தர வின் அடிப்படையில் தமிழக அரசானது, கடந்த 2017 நவம்பர் 20 இல் அரசாணை 144 இன்படி இனி கல்வித் தகுதியை பதவி உயர்விக்கும், புதிய பணி நியமனத்திற்கும் இனி தகுதியாக கொள்ள வேண்டாம் என தெளிவுரை வழங்கியுள்ளது. ஆனால், திண்டுக்கல் நெடுஞ்சாலைத் துறை கோட்டபொறியாளர் அரசு உத்தர வுக்கு மாறாக ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்ற தர்மர், ஆறுமுகம், கண்ணன் ஆகியோரை திடீரென சாலைப் பணியாளராக பதவி இறக்கம் செய்து உத்த ரவிட்டார். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை யில் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதி பதி ஸ்ரீமதி, வழக்குத் தொடர்ந்தவர் களுக்கு, அரசாணை வெளியிட்ட பிறகு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. ஏற்க னவே பதவி உயர்வு பெற்று பணியில் இருந்துள்ளனர். எனவே, அவர்களை பதவி இறக்கம் செய்திருப்பது சட்டத்திற்கு எதி ரானது. மேலும், அவர்களுக்கு பணப் பலன் உள்ளிட்ட அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். முன்னதாக சாலை ஆய்வாளர்கள் சார் பில் வழக்கறிஞர் பிரபுராஜதுரை நீதி மன்றத்தில் ஆஜராகினார் என்பது குறிப்பி டத்தக்கது.
டாஸ்மாக் ஊழியர்களிடம் மிரட்டி பணம் பறிப்பு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு புகார் மனு
திண்டுக்கல், டிச.20- ஒட்டன்சத்திரம் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடையில் ஊழி யர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் பத்தி ரிக்கை நிருபர்கள் குறித்து டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பாக திண்டுக்கல் ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்தி ரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிரா மங்களில் 19 அரசு மதுபான டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் ஒட்டன்சத்திரம் பகுதி யைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் என்று கூறி 10க்கும் மேற்பட்டவர்கள் கடை ஊழியர்களை மிரட்டி பணம் வாங்கி உள்ளனர். மேலும் பணம் தர மறுத்தால் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோம் என்று மிரட்டியதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். நிருபர் யார், அவர் எந்த பத்திரிக்கையில் வேலை செய்கிறார் என்ற விவரங்களுடன் பட்டி யலிட்டு மனு கொடுக்கப்பட்டுள்ளது. சிஐடியு மாவட்டச்செயலாளர் கே.பிரபாகரன், டாஸ்மாக் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ராமு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் விசாகன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். (நநி)
மின்சாரம் தாக்கி விவசாயி பலி போடி அருகே பரிதாபம்
தேனி , டிச. 20- போடி அருகே தோட்டத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி இறந்து போனது குறித்து காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர். போடி அருகே பெருமாள் கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சின்னித்தேவர் மகன் பெருமாள் தேவர் (72) விவசாயி. இவரது மகன் ஜெயப்பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான மிளகாய் தோட்டம் இதே பகுதியில் உள்ளது. இந்த தோட்டத்திற்கு பெருமாள்தேவர் சென்றுள்ளார். அங்குள்ள மோட்டார் அறை அருகே வேலை செய்ய சென்றபோது அங்கு அறுந்து கிடந்த மின்சார வயரை பெருமாள் தேவர் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பெருமாள் தேவர் இறந்து போனார். இதுகுறித்து ஜெயப்பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.