திருவில்லிபுத்தூர் வட்டம், மொட்டமலை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்வாழ் மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச பாய் மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கான ஆடைகளை ஞாயிற்றுக்கிழமை திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் ரங்கசாமி வழங்கினார். வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மொட்டமலை அகதிகள் முகாம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.