சிவகாசி, ஜன.17- சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் திருவள்ளுவர் தின விழா நடை பெற்றது. திருச்செந்தில் கலைய ரங்கில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் மு.முத்துச்சாமி தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் மு.நாகவள்ளி முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் பி.எம்.பெரியநாய கம் வரவேற்றார். துவக்கி வைத்து மாவட்டத் தலைவர் கே.சண்முகம் பேசினார். மருத்துவர் ந.தங்கவேல், மாவட்டக்குழு உறுப்பினர் கா.சிவபெருமான், வழக்கறி ஞர் பெ.ரவீந்திரன், ஆசிரியை கஸ்தூரி ஆகியோர் விளக்கிப் பேசினர். திருக்குறள் எழுதுதல், திருவள்ளுவர் படம் வரைதல் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து 100 தமு எகச உறுப்பினர் சந்தாக்களை பி.செல்வநாயம் வழங்கினார். “குறள் என்னும் பொதுமறை தந்த பெருமான்“ என்ற தலைப்பில் எழுத்தாளர எஸ்.இலட்சுமணப் பெருமாள் சிறப்பு ரையாற்றினார். முடிவில் கிளை பொருளாளர் எஸ்.எம்.முரு கேசன் நன்றி கூறினார். மேலும் இதில், ஆர்.விஜய முனியசாமி, ஏ.முத்துராஜ் ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்ற னர்.