மதுரை, பிப்.10- திருமங்கலம் நகராட்சி 14-ஆவது வார்டில் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் ஆதரவு டன் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க. பாண்டிச்செல்வி போட்டியிடுகிறார். அவர் வியாழனன்று திமுக வார்டு பொறுப்பாளர் அழகு மலை, வார்டு செயலாளர் பால் பாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் த.செல்ல கண்ணு, வி.பி.முருகன், திருமங் கலம் தாலுகா செயலாளர் மூர்த்தி, தாலுகா குழு உறுப்பி னர்கள் முருகேசன், சித்திர வேலு உள்ளிட்டோருடன் சென்று வாக்குச் சேகரித்தார். வாக்காளர்களிடம் பேசிய பாண்டிச்செல்வி, திருமங்கலம் நகராட்சியின் அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்று வேன். குறிப்பாக 14-ஆவது வார் டில் கூடுதல் கவனம் செலுத்தப் படும். அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படும். குடிநீர் விநியோகத்தில் உள்ள கால இடைவெளி குறைக்கப்படும். சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.