districts

img

கழிவுநீர் கலந்து வரும் குடிநீர் மதுரை கிழக்கு மண்டல அலுவலகத்தை மாதர் சங்கத்தினர் முற்றுகை

மதுரை, ஜூலை 7- மதுரை மாநகராட்சி 88 ஆவது வார்டு தெய்வக்கனி தெரு, கிறிஸ்த வர் தெரு, 89 ஆவது வார்டு சூசை  மைக்கேல் தெரு ஆகிய பகுதி களில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக கடந்த இரண்டு வாரங்க ளுக்கு முன் மேயரை நேரில் சந் தித்து ஜனநாயக மாதர் சங்க நிர்வா கிகள் மனு கொடுத்தனர். அந்த மனு வின் மீது நடவடிக்கை எதுவும் எடுக்  கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து வியாழனன்று குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப் பகுதி மக்களுடன் இணைந்து மதுரை கிழக்கு மண்டல அலுவல கத்தை முற்றுகையிடும் போராட் டத்தை ஜனநாயக மாதர் சங்கம் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து மண்டல தலைவர் முகேஷ் சர்மா மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு செய லாளர் ஜெ.லெனினை தொடர்பு கொண்டு மண்டல அலுவலகத்தை ஜனநாயக மாதர் சங்கத்தினர் முற்றுகையிடும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் சம்பந்  தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து  அதிகாரிகளுடன் ஆய்வு செய்வ தாகவும் கூறினார். 

கிறிஸ்தவ தெருவுக்கு வந்த மண்டல தலைவர் முகேஷ் சர்மா வை முற்றுகையிட்ட அப்பகுதி பொதுமக்கள் பாட்டிலில் பிடித்து வைத்திருந்த கழிவு நீர் கலந்த குடி நீரை காண்பித்தனர். அதிகாரிகளு டன் அப்பகுதி முழுவதும் ஆய்வு செய்து 20 நாட்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்  வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மண்டலத் தலைவர் கூறி னார். தொடர்ந்து 89 ஆவது வார்டு  சூசைமைக்கேல் தெருவிலும் மண்டல தலைவர் ஆய்வு மேற் கொண்டார். இதுகுறித்து அப்பகுதியினை சேர்ந்த இந்திராணி கூறுகையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை தண்ணீர் நன்றாக வந்தது. அதற்கு பின் சாக்கடை வாடையுடன் தான் தண்ணீர் வரு கிறது. இதனால் குடிப்பதற்கு தண்ணீர் விலைக்குத்தான் வாங்கு கின்றோம். இப்பகுதி கவுன்சிலரி டம் கூறினால், நீங்கள் எனக்கா ஓட்டு போட்டீர்கள் என்று கூறுகிறார்.

மண்டல தலைவர் வந்து தற்போது  பார்த்துவிட்டு சரி செய்வதாக கூறி யுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினை சேர்ந்த மாசேதுங் கூறு கையில், இப்பகுதியில் குடிநீர் இணைப்பு குழாய் போடப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. அதற்குப்பின் பாதாள  சாக்கடை இணைப்பு கொடுக்கப்  பட்டுவிட்டது. இந்த பாதாள சாக்  கடை இணைப்பு குடிநீர் குழாய்க்கு மேல் கொடுக்கப்பட்டுள்ளதால் அதில் கழிவு நீர் கலந்து வருகிறது. அதேபோல் மழை பெய்தால் இப்பகுதி முழுவதும் தண்ணீர் நிரம்பி விடும். அவை குடிநீர் குழாய் செல்லும் பாதை வழியா கத்தான் பாதாள சாக்கடைகளுக்கு செல்லும். குடிநீர் வரும் நேரங்க ளில் எல்லாம் அந்த கழிவுநீர் செல்லும் குழாய் பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேறி பெரும் துர்  நாற்றம் வீசுகிறது. எனவே இப்பகு தியில் உள்ள குடிநீர் இணைப்பு களை புதிதாக மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறினார். ஆய்வின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு செயலாளர் ஜெ. லெனின், மாதர் சங்க பகுதிக்குழு செயலாளர் யமுனா, துணைத் தலைவர் ஜே. சகுந்தலா, துணைச் செயலாளர் வீரசின்னு, மூத்த தோழர் டி. ராம மூர்த்தி, கிளைச் செயலாளர் பாண்  டியராஜன் ஆகியோர் உடனிருந்த னர்.