மின்வாரிய ஊழியர்களுக்கு 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வினை 4 சதவிகித அகவிலைப்படியை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்திட வேண்டும். கேங்க்மேன் பணியாளர்களை கள உதவியாளராக பணி மாற்றம் செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மதுரை கிளையின் சார்பில் உசிலம்பட்டி, கொட்டாம்பட்டி, பசுமலை உள்ளிட்ட அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சுரேஷ்குமார், மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.