districts

img

மதுரையில் சுட்டெரிக்கும் வெயில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மதுரை, மே  17-   தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. இன்னும் சில நாட்களுக்கு இந்த வெயிலின் தாக்கம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில்  கடந்த 2 நாட்களில் மட்டும் 103 டிகிரி பாரன்ஹீட் செல்சியஸை தாண்டி வெயிலின் தாக்கமானது அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்த்து வீடுகளுக்குள்ளே இருந்தனர். மேலும் மதுரை மாநகர் பகுதி முழுவதிலும் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சிலர் மயங்கிவிழும் நிலையும் ஏற்பட்டது.  வெயிலின் தாக்கத்திலிருந்து ஓரளவு மீள பொதுமக்கள் குளிர்பானங்கள், பழச்சாறுகளை, மோர் போன்றவற்றை குடிக்கின்றனர்.  இந்த உக்கிரமான வெயிலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி யுள்ளது.