சாதிக்கொடுமைகளுக்கு எதிராகவும் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடந்துசெல்ல உரிமை வேண்டும் என்று போராடிய வரலாற்றுச்சிறப்புமிக்க வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மாநகர் 56 ஆவது வட்ட திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய 1 ஆம் பகுதிக்குழு இணைந்து அழகரடியில் ஸ்ரீநாராயண குரு, மதுரை கோட்ஸ் அருகில் உள்ள தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கு சனிக்கிழமையன்று மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 56வது வட்ட திமுக செயலாளர் பி.தவமணி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ராதா, ஏ.பாண்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.