districts

img

உழைக்கும் மக்கள் பக்கமே செங்கொடி இயக்கம்

திருப்பூர், நவ. 28 - திருப்பூரில் கடந்த காலத்தில் ரூ.75 கோடி  கல்விக்கடன் கொடுக்கப்பட்டிருக்கும் நிலை யில், இப்போது ரூ.18 கோடி மட்டும் கல்விக்  கடன் கொடுக்கப்பட்டிருப்பது ஏன் என்று  கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்  பி.ஆர்.நடராஜன் கூறினார். திருப்பூரில் ஞாயிறன்று 105ஆவது நவம் பர் புரட்சி தினம், தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு  செந்தொண்டர் பேரணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பி.ஆர்.நடராஜன் பேசியபோது கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த காலத்தில்  ரூபாய் 75 கோடி கல்வி கடன் கொடுக்கப்பட் டுள்ளது. ஆனால் இப்போது ரூபாய் 18 கோடி  தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் வசிக் கும் திருப்பூரில் இளைய தலைமுறைகள் படிப்பதற்கு கூடுதல் கல்விக் கடன் வழங்குவ தற்கு இந்த மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும். மக்கள் சந்திப்பு பயணங்களின் போது  வீட்டுமனை பட்டா குடியிருப்புகள் வேண்டும்  என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் மூலம்  கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் 50 சதம் ஊராட்சி, பேரூராட்சி ஏழைகளுக்கும்  50% வேறு பகுதியைச் சேர்ந்தவருக்கு தர லாம் என்று உள்ளது இதில் அரசு தெளிவாக  முடிவெடுக்க வேண்டும். வரும் ஜனவரி மாதம் நான்காவது குடிநீர்  திட்டம் தொடங்க இருப்பதாக கூறியுள்ளனர். அப்போது தற்போதுள்ள இரண்டாவது குடி நீர் திட்டத்தில் கிடைக்கக்கூடிய 24 மில்லியன்  லிட்டர் குடிநீரை பல்லடம் சுற்றுவட்டார கிராம  பகுதிகளுக்கும் ஊராட்சிகளுக்கும் வழங்கு வதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண் டும். இதற்காக தனி பொறியாளரை வரவ ழைத்து ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட வருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியும் சிஐடியு தொழிற்சங் கமும் சம்பள உயர்வு போனசுக்காக மட்டும்  போராடக்கூடிய இயக்கம் அல்ல. மக்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச்  செல்லும் பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.இவ்வாறு பி.ஆர். நடராஜன் எம்பி கூறி னார். இதைதொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் பேசியதாவது: மாநில அரசுத்துறையில் எதிர்காலத்தில் சி மற்றும் டி பிரிவில் கிளாஸ் 4 பியூன், கிளார்க் போன்ற வேலைகளுக்கு ஆள் எடுப் பதில்லை. மேலும் அரசு துறையில் இருந்து  அனைத்தையும் தனியார் துறைக்கு மாற்றப் போகிறோம் என்று சொல்லக்கூடிய மோச மான நிலை நிலவுகிறது. 

இந்த இரண்டு துறைகளில்தான் படிக்கா தவர்கள் அதிக அளவில் வேலை செய்கிறார் கள். உள்ளாட்சித் துறை மற்றும் சி அன்ட்  டி பிரிவு துறையில் எதிர்காலத்தில் குறைந்த  கல்வி தகுதி உடையவர்களுக்கு அரசு வேலை இல்லை என்ற நிலைமைக்கு மாநில  அரசு வருகிறது. இது ஒன்றிய அரசும், மாநில  அரசும் ஒரே கொள்கையில் செயல்படுவதை காட்டுகிறது. 2020 மார்ச் மாதம் முதல் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படாததை கண்டித்து பல  போராட்டங்கள் நடத்தி தான் போனஸ் பெற்று  உள்ளார்கள். மூன்று மாதத்திற்கு ஒருமுறை  உயர வேண்டிய பஞ்சப்படி மூன்று ஆண்டு களாக உயராமல் இருக்கிறது. பேச்சு வார்த்தை நடத்தி பஞ்சப்படி கொடுக்க பரிச ளிக்கிறோம் என்று சொல்லிவிட்டு நீதித்து றைக்கு சென்று இப்போது கொடுக்க முடி யாது கால அவகாசம் வேண்டும் என்று மாநில  அரசு கேட்கிறது. இதையேதான் ஏற்கனவே இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  அரசும் செய்தது. தொழிலாளர்கள் நலன்கள்  சம்பந்தப்பட்ட விஷயத்தில் அண்ணா திரா விட முன்னேற்றக் கழகத்திற்கும், திராவிட  முன்னேற்றக் கழகத்திற்கும் எந்த வேறுபா டும் இல்லை. ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் பிரச்சனை என்றால் நாங்கள் மாநில அரசின் பக்கம் நிற்போம். அதேசமயம் மாநில அர சுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடை யில் பிரச்சனை என்றால் நாங்கள் எப்போ தும் உழைக்கும் மக்கள் பக்கமே நிற்போம் என்று ஜி.சுகுமாறன் கூறினார்.