districts

img

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமையன்று நடைபெற்ற நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமையன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நல வாரியம் மூலம் 438 பயனாளிகளுக்கு ரூ.15.08 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை-கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினார்.  இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் நாராயணன் முன்னிலை வகித்தார். இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி அவர்கள், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.