மதுரை, பிப்.28- மதுரை வளர்நகர் அருகே ராஜீவ் காந்தி நகர் பகுதியில் கடந்த 22ஆம் தேதி உலகனேரியை சேர்ந்த பாலமுரு கன் என்ற டோராபாலா கொலை செய் யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் குறித்து மாட்டுத்தாவணி காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்திவந்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக வினோத், மாரி, விஜயராகவன், சூர்யா, ஜெகதீஸ்வரன் 5 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர். இதில் முதல் குற்றவாளியாக பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய பிரபல ரௌடியான உலகனேரியை சேர்ந்த வினோத் என்பவரை கைது செய்தனர். கொலை சம்பவம் நடைபெற்ற பகுதி மற்றும் பதுங்கியிருந்த பகுதி குறித்து அடை யாளம் காட்டுவதற்காக அவரை வண்டியூர் பகுதிக்கு காவல்துறை யினர் அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த அரிவாளால் முதல் நிலை காவலர் சரவணகுமாரை வெட்டிவிட்டு, வினோத் தப்ப முயன்றுள்ளார் .காவல் ஆய்வாளர் ராஜாங்கம் ரவுடி வினோத்தின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டு, அவரைப் பிடித்தார். இதில் காயம டைந்த ரவுடி வினோத்தை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தனர்.