சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது
விருதுநகர், மார்ச்.15- விருதுநகரைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலி யல் தொந்தரவு கொடுத்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். விருதுநகர் புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. அருகே உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இச்சிறுமிக்கு அவரது தந்தை தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமி தனது தாயிடம் நடந்தவற்றை கூறி யுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தாயார், கடந்த பிப்ரவரி 17 இல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், விசாரணை நடத்தி னர். இதையடுத்து அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில், சிறுமியிடம் குழந்தைகள் நலக்குழு மத்தினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், அருகில் வசிக்கும் கட்டிடத் தொழிலாளியான மூர்த்தி(21) என்பவர் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட தாக அச்சிறுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து, மூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து சிறை யில் அடைத்தனர்.
குறைந்து வரும் பெரியாறு, வைகை நீர்மட்டம் 5 மாவட்டங்களின் குடிநீருக்கு ஆபத்து
தேனி, மார்ச் 15- நீர்வரத்தின்றி முல்லைப்பெரியாறு, வைகை அணை களின் நீர்மட்டம் சரிந்து வருவதால் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது . கோடைகாலம் தொடங்கியதில் இருந்து மழைப் பொழிவு இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து கடுமையாக சரிந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து கடுமையாக சரிந்தது. பெரியாறு அணையில் புதன்கிழமை காலை 11 கன அடி நீர் மட்டுமே வருகிறது. அணையின் நீர்மட்டம் 17.70 அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து தமி ழக பகுதிக்கு 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 53.67 அடியாக உள்ளது. 105 கன அடி நீர் வருகிறது. 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின் நீர்மட்டம் 37.90 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 55 கன அடி நீர் திறக்கப்படு கிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 19.68 அடி யாக உள்ளது. 42 கன அடி நீர் வருகிறது. 23 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
10 நாட்களாக பற்றி எரியும் கொடைக்கானல் வனம்
திண்டுக்கல், மார்ச் 15- கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 10 நாட்க ளாக வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. வனத்துறை அதிகாரிகள் தீயை அணைக்க முடியாமல் திணறுகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர்ந்து காட்டுத்தீ எரிந்து கொண்ருக்கிறது. இந்த வனப்பகுதியில் அரிய வகை மரங்கள், நூற்றாண்டுகளை கடந்த மரங்கள் உள்ளன. யானை, சிறுத்தை, காட்டுமாடு, உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்கள் உள்ளன. கொடைக் கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட பாம்பார் புரம், வெள்ள கவி, செண்பகனூர் அருகேயுள்ள சிட்டி வியூ, கடந்த இரண்டு தினங்களாக காட்டுத்தீ எரிந்து கொண்டிருக்கி றது. 40க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள், தீய ணைப்புத்துறை அதிகாரிகள் தீயை அணைப்பதற்கு பெரு முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். வனத்துறை நிலத்தி லிருந்து தனியார் நிலங்களுக்கும் தீ பரவி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக கொடைக்கானல் பகுதியில் உள்ள பல இடங்களில் காட்டுத்தீ உருவாகி எரிந்து வரு கிறது. வனத்துறையினரின் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டு கிறார்கள். மாவட்டத்தின் பேரிடர் மேலாண்மை அதிகாரி களும் இந்த தீயை அணைக்க போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும். நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் உள்ள மரங்கள் தீயில் கருகி நாசமாகி உள்ளன. ஒரு பக்கம் அதிகாரிகள் தீயை அணைத்துக்கொண்டு உள்ள னர். மறு புறம் தீ பரவிக்கொண்டிருப்பதை தடுக்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக கொடைக்கானல் நகர் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. மக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்படுகிறார்கள். (நநி)
தேனி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை
தேனி, மார்ச் 15- தேனி பத்திர பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவல கத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை உதவி காவல் கண்காணிப்பா ளர் சுந்தரராஜன் தலைமையில் புதனன்று காவல்துறை யினர் சோதனை நடத்தினர். தேனி பேருந்து நிலையம் அருகே திட்டச்சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது தேனி சார் - பதிவாளர் அலுவலகம். நாள் தோறும் பரபரப்பாக இயங்கி வரும் இந்த அலுவலகத்தில் அதிக அளவு லஞ்சம் கேட்பதாக தொலைபேசி மூலம் லஞ்ச ஒழிப்புத் துறையின ருக்கு புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சுந்தர்ராஜன் தலைமயில், ஆய்வா ளர் ஜெயப்பிரதா உள்ளிட்ட ஆறுபேர் கொண்ட குழு வினர் புதன்கிழமை மாலை திடீரென சார் - பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை மேற்கொண்ட னர். இதனால் அலுவலகம் அடைக்கப்பட்டு அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத் தப்பட்ட பிறகு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து சார் - பதி வாளர் சசிகலாராணி, அலுவலக பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் இந்த விசாரணை நடை பெற்று வருகிறது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெறும் விசாரணையின் முடிவில் தான் கணக்கில் வராத பணம் ஏதும் கைப்பற்றப்பட்டதா என்ற விவரங்கள் தெரியவரும் என லஞ்ச ஒழிப்புத் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். லஞ்ச ஒழிப்புதுறையினரின் திடீர் சோதனையால் பத்திர பதிவு அலுவலகம் வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
பள்ளத்தூர் டாஸ்மாக் ஊழியர் கொலை அரசு இராஜாஜி மருத்துவமனை முன்பு உறவினர்கள்-சங்கத்தினர் மறியல்
மதுரை, மார்ச் 15- சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பள்ளத்தூரில் அரசு டாஸ்மாக் மது பானக் கடை மீது மார்ச் 3 அன்று கள்ளச் சாராயக்கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய தில் கடை ஊழியர் அர்ஜூன் புதனன்று அதி காலையில் உயிரிழந்தார். மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனையில் அவரது உடற்கூராய்வு மேற் கொள்ளப்பட்டது. அர்ஜூனன் உயிரிழந்த தகவல் அறிந்த டாஸ்மாக் ஊழியர் சங்கத்தி னர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பாக திரண்டு, அர்ஜூனின் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். அர்ஜுனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணத் தொகை வழங்க வேண்டும். அர்ஜுனனின் மூன்று பெண் குழந்தைகளின் கல்விச்செலவை அரசே ஏற்க வேண்டும். அர்ஜூனின் மனைவிக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனை முன்பு காவலர்கள் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று உறுதிய ளித்ததைத் தொடர்ந்து சடலத்தை பெற் றுச்சென்றனர். இதுதொடர்பாக டாஸ்மாக் தொழிற் சங்கத்தினர் கூறுகையில், டாஸ்மாக் ஊழி யர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. டாஸ்மாக் கடைகளில் இருந்து பணம் எடுத்துச் செல்லும் போது அச்சுறுத்தல் உள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் பாது காப்பு தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தொழிலதிபர் கடத்தல் வழக்கில் காவலாளி தற்கொலை; திடீர் திருப்பம்
தேனி, மார்ச் 15- உத்தமபாளையம் அருகே ராயப்பன் பட்டியை சேர்ந்த கோழிப்பண்ணை அதிபர் அதிசயம் கடத்தப்பட்ட வழக்கில் உடந்தை யாக இருந்த காவலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பத்தை ஏற்படுத்தி யுள்ளது. ராயப்பன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோழிப்பண்ணை அதிபர் அதிசயம் (வயது 70). சொந்த விவசாய தோட்டங்களும் உள் ளது. செவ்வாயன்று காலை ஆனைமலை யன்பட்டி தோட்டத்திற்கு மோட்டார் சைக்கி ளில் சென்றுவிட்டு வீட்டிற்கு சென்று கொண் டிருந்தார். அப்போது வேனில் வந்த 2 பேர் அவரை தாக்கி கண்களைக் கட்டி கடத்திச் சென்றனர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஸ் டோங் கரே உத்தரவின் பேரில் அவரை கடத்திச் சென்ற காரை மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிரமாக தேடினர். ஆண்டிபட்டி புள்ளிமான் கோம்பை ரோடு வழியாக சென்ற வாகனத்தை போலீசார் துரத்திச் சென்றபோது வைகை புதூர் பிரி வில் கடத்தல் கும்பல் அதிசயத்தை கீழே தள்ளிவிட்டு சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அதிசயத்தை சார்பு ஆய்வாளர் சுல்தான்பாட்சா மீட்டு க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தார். இதனிடையே வாக னம் வைகைபுதூர் வழியாக தப்பிச் செல் வதை வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்த தின் பேரில் ஜெயமங்கலம் சப்-இன்ஸ் பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ஒத்தவீடு வழியாக சென்ற அந்த வாகனத்தை மேலக்காமக்காபட்டியில் வைத்து பிடித்தனர். அந்த காரை மதுரை மாவட்டம் திருநகர் சக்களைப்பட்டி நடுத் தெருவை சேர்ந்த தர்மராஜ் மகன் பிரபு (31) என்பவர் ஓட்டிச்சென்றார். அவரை பிடித்து விசாரித்ததில் மதுரை திருப்ப ரங்குன்றம் பாலாஜிநகரை சேர்ந்த திரு முருகன் மகன் அஜீத் (26), அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கவுசிகன் (22) மற்றும் கூழ் என்ற அழகுசுந்தரம், திருப்பதி ஆகியோர் கூலிப்படையாக இருந்து அதிச யத்தை கடத்தியதாகவும் போலீசார் தங் களை சுற்றி வளைத்ததால் வேறு வழி யின்றி அதிசயத்தை கீழே தள்ளிவிட்டதாக வும் தெரிவித்தனர். இதனையடுத்து போலீ சார் அவர்கள் 4 பேரையும் கைது செய்த னர். இந்நிலையில் அதிசயம் தோட்டத்தில் காவலாளியாக வேலைபார்த்த சங்கர லிங்கம் (65) என்பவர் நேற்று மாலை தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நாராயணதேவன்பட்டி நடுத்தெருவை சேர்ந்த சங்கரலிங்கம் கடந்த 3 மாதமாகத்தான் இங்கு வேலை செய்து வந்தார். இவரது முதல் மனைவி அங்காள ஈஸ்வரி இறந்து விட்டதால் அவரது தங்கை யான மீனா (46) என்பவரை 2வது திருமணம் செய்துகொண்டு ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள அதிசயத்திற்கு சொந்தமான தோப்பு வீட்டில் வசித்து வந்துள்ளார். அதிச யத்தை கடத்திய கூலிப்படை பிடிபட்ட சம்ப வம் அறிந்ததும் சங்கரலிங்கம் தற்கொலை செய்து கொண்டார். இதனால் கடத்தல் கும்பலுக்கும் இவருக்கும் தொடர்பு இருக் கலாம் என்ற சந்தேகம் இருந்து வந்தது. சங்கரலிங்கத்தின் செல்போனில் கடத்தல் காரர்களின் செல்போன் எண்கள் உள்ள தாகவும் தெரியவந்துள்ளது. எனவே போலீ சார் தீவிர விசாரணை நடத்தி வருகின்ற னர்.
“பெண்கள் மேம்பாட்டு நிகழ்ச்சி“ : ஒரே இடத்தில் 3625 கல்லூரி மாணவிகள் பங்கேற்று உலக சாதனை
விருதுநகர், மார்ச்.15- விருதுநகரில் உள்ள வி.வி.வன்னியப் பெருமாள் கல்லூரியில் பெண்கள் மேம்பாடு குறித்த நிகழ்ச்சியில் ஒரே இடத்தில் 3625 கல்லூரி மாணவிகள் 3.15 மணி நேரம் பங்கேற்று உலக சாதனை புரிந்தனர். “பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான பேருரை“ எனும் நிகழ்ச்சி விருதுநகர் வி.வி.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி மற்றும் ரோட்டரி கிளப் ஆகியவை சார்பில் நடைபெற்றது. கடந்த மார்ச் 8 இல் கேரளா மாநிலத்தில் இதேபோல் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1050 மாணவிகள் பங்கேற்று உலக சாதனை படைத்துள்ளனர். அச்சாதனையை முறியடிக்கும் விதமாக ஒரே இடத்தில் 3625 மாணவிகள் பங்கேற்றதோடு, 3.15 மணி நேரம் இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், “இன்றைய பெண்களின் முன்னேற்றம் நாளைய தலைமுறையின் முன்னேற்றம்“ எனும் தலைப்பில் பலர் உரையாற்றினர். இதையடுத்து, “ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்“ மற்றும் “இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்“ சார்பாக பங்கேற்ற நடுவர் விவேக் உலக சாதனையாக அறிவித்தார். இந்நிகழ்வில் தொழிலதிபர் இதயம் முத்து, முதல்வர் மீனாராணி, கல்லூரி செயலாளர் கோவிந்தராஜபெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
குரூப்-2 மெயின் தேர்வு குளறுபடிகள் மறுதேர்வு நடத்த முதல்வர் தலையிடுக! ஆயக்குடி பயிற்சி மையம் கோரிக்கை
பழனி, மார்ச் 15- பழனி ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சி குரூப்-2 நேர்முகத்தேர்வு , நேர்முகத் தேர்வு இல்லாத பணிகளுக்கான மெயின் தேர்வினை கடந்த 25-2-2023 அன்று 186 மையங்களில் நடத்தியது..5446 பணிகளுக்கு 55 ஆயிரம் ர் இந்த தேர்வினை எதிர் கொண்டனர். ஆனால் தேர்வை சிறப்பாக எழுதலாம் என்று சென்றவர்களுக்கு காலையிலேயே மிகப்பெரிய அதிர்ச்சி! வினாத்தாள்,விடைத்தாள்கள் மாறி மாறி வழங் கப்பட்டது. இது தமிழகத்தில் உள்ள அனைத்து தேர்வு மையங்க ளிலும் நடந்துள்ளது. இதனால் தேர்வர்கள் மிகுந்த பதற்றம் அடைந்தனர். தேர்வாணையம் 45 நிமிடங்கள் கூடுதலாக நேரம் ஒதுக்கியது. ஆனால் தேர்வர்களின் மனநிலை மிக வும் கவலை அளிப்பதாகவே இருந்தது. மாணவர்கள் தேர்வினை எப்படியோ எழுதி முடித்துவிட்டனர். தேர்வு நாள் அன்றே மறுதேர்வு நடத்த வேண்டும் என கோரிக் கைகள் பல தரப்பினரிடம் வந்ததால் தேர்வாணையம் அவ சரமாக கூடி மறு தேர்வு இல்லை.முதல் தாள் தகுதித்தாள் மட்டுமே என விளக்கம் அளித்தது. ஆனால் தேர்வர்கள் மத்தியில் தேர்வில் வெற்றி என்பதை விட தேர்வர்கள் அனைவரும் மிகுந்த மன உளச்சலுடனே உள்ளனர் என்பது உண்மை நிதர்சனம். தேர்வாணையத்தின் மீது தேர்வர்கள் கொண்டுள்ள நம்பிக்கை என்றும் தொடர மறு தேர்வு நடத்துவதே சிறந்த முறை. அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் வகையில் குரூப்-2 மெயின் தேர்வினை ரத்து செய்து விட்டு புதிதாக மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும். இதில் தமிழக முதல்வர் தலையிட வேண்டும். தேர்வாணையம் பரி சீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
ஊரக வளர்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை, மார்ச் 15- பேச்சுவார்த்தையின் போது தமிழக ஊரக வளர்ச்சித் துறை ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளான ஊராட்சி செய லாளர் பணிவிதிகள்,சிறப்பு நிலை, தேர்வு நிலை அர சாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் சிவகங்கை ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உதயசங்கர், தனபால் உள்ளிட்டோர் பேசினர்.
நாம் தமிழர் கட்சியின் பேரணிக்கு அனுமதி மறுப்பு
மதுரை, மார்ச் 15- வட மாநில தொழிலாளர்களை முறைப்படுத்தக்கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெறவிருந்த பேரணி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தர விட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமி ழகத்தில் வட மாநிலத்தவர்கள் வருகையை முறைப் படுத்தி அவர்களுக்கு நுழைவு சீட்டு வழங்கி கண்காணிக்க வேண்டும். கோவை வழக்கில் 20 ஆண்டுக்கு மேலாக சிறை யில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யக் கோரியும் நாம் தமிழர் கட்சி சார்பாக தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தொடங்கி காயல்பட்டினம் வரை நடைபயண மேற்கொள்ளவும் தொடர்ந்து மாலையில் அங்கு பொதுக் கூட்டம் நடத்தவும் அனுமதி வழங்கக்கோரி மனு அளித்தி ருந்தோம். ஜனவரி மாதம் இந்த நிகழ்வு நடைபெறுவதாக இருந் தது. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்தல் அந்த நிகழ்வை 18/3/2023 அன்று நடத்த திட்ட மிட்டு அனுமதி வழங்க கோரி காவல் துறை அதிகாரிகளும் மனு அளித்து நடவடிக்கை இல்லை. எனவே உடன்குடி முதல் காயல்பட்டினம் வரை நடைபயணம் மேற்கொள்ள பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி வழக்கி உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை புதனன்று நீதிபதி இளங் கோவன் முன்பு நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில், தற்போது உள்ள சட்ட ஒழுங்கு பிரச்சனை உள்ளதால் இந்த கூட்டத்திற்கு அனு மதிக்க முடியாது என வாதிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து நீதிபதி, வட மாநில தொழி லாளர் பிரச்சனை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் தமிழ் நாடு அரசின் வரன்முறைக்குள் வராது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
‘குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய முடிவு’
சிவகங்கை, மார்ச் 15- சிவகங்கை மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் பொருட்டு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. சிவகங்கை விற்பனைக் குழுவிற்குட்பட்ட சிங்கம்புணரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 400 மெ.டன், சிவகங்கை ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் 100 மெ.டன் மற்றும் திருப்புவனம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 50 மெ.டன் ஆக மொத்தம் 550 மெ.டன் அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்கான கொள்முதல் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளால் வழங்கப்பட வேண்டிய அர வைக் கொப்பரையின்தரம் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஈரப்பதம் 6 சத வீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். வைக்கோல், தூசு, நார் போன்ற அயல் பொருட்கள் அதிக பட்சம் 1 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படும். பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை, சுருக்கம் கொண்ட கொப்பரை மற்றும் சில்லு கொப்பரை ஆகியவை அதிகபட்சம் 10 சதவீதம் மட்டுமே இருக்க லாம். அலுவலர்களால் தர ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட கொப்பரை எடையிடப்பட்டு, அதற்கான விலை அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப் படும். இக்கொள்முதல் பணி 01.04.2023 முதல் 30.9.2023 வரை மேற்கொள்ளப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, சிவகங்கை மாவட்ட தென்னை விவ சாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களி டம் உள்ள கொப்பரையினை சிங்கம்புணரி, திருப்பு வனம் மற்றும் சிவகங்கை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து விற்று பயனடையலாம். மேலும், இது குறித்த தகவல்களை பெறு வதற்கு, சிங்கம்புணரி- 97862 69851, திருப்புவனம்- 99447 66326 மற்றும் சிவகங்கை- 70107 92414 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.