கடமலைக்குண்டு, ஜன.4- தேனி மாவட்டம், ஆண்டிப் பட்டி தாலுகா, கடமலைக் குண்டு அருகே பின்னத் தேவன்பட்டி கிராமம் உள் ளது. இந்த கிராமத்திற்கு சோலைத்தேவன்பட்டி கிரா மத்தில் இருந்து சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் இடையே அருகவெளி ஓடையில் தரைப்பாலம் கட்டப்பட்டுள் ளது. கடந்த சில மாதங்களாக பெய்துவரும் மழையினால் அருகவெளி ஓடையில் தொடர்ந்து தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. 3 மாதங் களுக்கும் மேலாக தரைப் பாலத்தில் தண்ணீர் ஓடிய தால், பாலத்தின் மேற்பரப் பில் அதிகமான பாசி படர்ந்துள்ளது. இதனால் இந்த பாலத்தில் வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் தொடர்ந்து வழுக்கி விழுந்து வருகின்ற னர். மேலும் பின்னத்தேவன் பட்டி கிராமத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 15க்கும் மேற்பட்டோர் இந்த பாலத் தில் வழுக்கி விழுந்து காய மடைந்துள்ளனர். பாலத்தில் வழுக்கி விழுவது தொடர்ந்த தால் பாலத்தின் ஒருபகுதி யை கற்களால் அடைத்து விட்டு மற்றொரு பகுதியில் பாசிகளை அப்புறப்படுத்தி சென்று வருகின்றனர். ஆனால் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் பாலத்தின் மேற் பகுதியில் மீண்டும் மீண்டும் பாசி உருவாகி வருகிறது. இதன்காரணமாக இந்த தரைப்பாலத்தில் வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக வெளி யூர்களில் இருந்து வரு பவர்கள் பாலத்தில் பாசி படர்ந்து இருப்பது தெரியா மல் வழுக்கி விழுந்து காய மடைந்து வருகின்றனர். தண் ணீர் வரத்து ஏற்படும் போதெல்லாம் இந்த பிரச்ச னையை தீர்க்க தரைப்பாலத் திற்கு பதிலாக பெரிய பாலம் கட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பாசிகளை அகற்ற அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை .இதனால் பின் னத்தேவன்பட்டி கிராம மக் களே பாலத்தில் படர்ந்துள்ள பாசிகளை அகற்றி வருகின்ற னர். 3 நாட்களுக்கு ஒரு முறை இதேபோல பாசியை அகற்றி வருவதாகவும் மக் கள் கூறுகின்றனர்.