districts

img

சடலத்துடன் பொதுமக்கள் கண்டன போராட்டம்

விருதுநகர், மே 11- விருதுநகரில் சுடுகாட்டிற்கு  செல்ல முடியாத வகையில் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டியதை கண்டித்து பொது மக்கள்  சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாத்திநாயக்கன்பட்டி சாலையில் நகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. அதன் அருகிலேயே அனைத்து சமூகத்தினரும் பயன்படுத்தி வரும் சுடு காடு உள்ளது. இந்நிலையில், நக ராட்சிக்கு சொந்தமான குப்பை வாகனங்  கள் சுடுகாட்டுச் சாலையின் இருபுறமும்  குப்பைகளை கொட்டி வந்துள்ளன. நாள டைவில் சுடுகாட்டிற்கு சடலங்களை கொண்டு செல்ல இயலாத அளவிற்கு குப்பைகள் அங்கு தேக்கி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினர் பலமுறை புகார்  தெரிவித்தும் குப்பைகளை அகற்ற வில்லை. இந்நிலையில், குப்பைகளை அகற்றக் கோரி அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த பொது  மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்  டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா, நக ராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் ஆகி யோர் பொது மக்களுடன் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர். முடிவில், விரைவில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.