districts

img

தேனியில் தூய்மை பணியாளர் குடியிருப்புகளுக்கு சாக்கடை கலந்த குடிநீர்

தேனி, ஏப்.4- தேனி அல்லிநகரம் நகராட்சியில் தூய்மை பணியாளர் குடியிருப்புகளுக்கு சாக்கடை கலந்த குடிநீர், குடியிருக்க முடியாத வகை யில் துர்நாற்றம் வீசுவதை கண்டித்து சிஐடியு போராட்ட அறிவிப்பை தொடர்ந்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் காவல்துறை யினர் நடத்திய பேச்சுவார்த்தையில் நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். தேனி அல்லிநகரம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பொம்மையகவுண்டன்பட்டியில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு அங்கு தூய்மை பணியாளர்கள் வசித்து வரு கின்றனர்.  அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு தனியான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு குடிநீர் விநியோகிக்கபடுகிறது. கடந்த ஆறு மாதமாக குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது. குடிநீரில் துர்நாற்றம் வீசுவதால் அந்த நீரை துணி கூட துவைக்க முடியாமல் திண்டாடி வருகிறார்கள். அங்கு சாக்கடை வசதி இல்லாமல் கழிவு நீர் அங்கு சிறு குளம் போல் தேங்கி நிற்கிறது.  இதனால் அங்கு கொசு உற்பத்தி அதிகரித்து, துர்நாற்றம் வீசி தொழிலாளர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், குடியிருக்க முடியாமல் தூய்மை பணியாளர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். 

சிஐடியு போராட்ட அறிவிப்பு

தேனி நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சாக்கடை கழிவுகளை கடந்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் திங்க ளன்று தேனி நகராட்சி அலுவலகத்தை முற்று கையிடப்படும் என அறிவிக்கப்பட்டது.  இதனைத்தொடர்ந்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுல்தான் தலைமையில் காவல் துறையினர் தூய்மை பணியாளர் குடியிருப்புக்கு நேரில் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மூன்று தினங்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தனர்.  இதனைத் தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது .சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் டி.ஜெயபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் இ.தர்மர், சிஐடியு நிர்வாகிகள் ஏ.சி.காமுத்துரை, ஆர்.பொன்னுத்துரை, எஸ்.கண்ணன், கோபால், நடேசன், அல்லி உதயன், மலைச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.