மதுரை, மே 17- பல கிலோமீட்டர் நடந்தே சென்று துணிகளை தைத்துக் கொடுக்கும் தையல் தொழி லாளிக்கு அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் நிதி யுதவி வழங்கினார். கடந்த சில நாட்களுக்கு முன் யூ டியூப் சேனல் ஒன் றில் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த தையல் தொழிலாளி நாகேஷ் குறித்து ஒரு காணொலி வெளியாகியிருந்தது. அதில் தினமும் 30 முதல் 40 கிலோமீட்டர் நடந்தே சென்று கிழிந்த துணிகளை தைத்து தரும் பணியினை கடந்த 40 வருடங்களாக செய்து வரும் தையல் தொழி லாளி நாகேஷ் குறித்து தக வல் வெளியாகி இருந்தது. அந்த காணொலியில் நாகேஷ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ் வாதாரத்துக்கு உதவிடு மாறும் தனக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்திருந் தார். அதனைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், நாகேசுக்கு சிலைமான் புளியங்குளம் அருகில் வீட்டு மனை வழங்க உத்தரவிட் டார். அதே காணொலியை கண்ட தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முனைவர் பி. டி. ஆர். பழனிவேல் தியாக ராஜன் தையல் தொழிலாளி நாகேஷை புதனன்று தனது வீட்டுக்கு அவரது காரில் அழைத்து வந்தார். அவரது வாழ்வாதாரத்துக்கு தேவை யான நிதியுதவி வழங்கி னார்.