districts

img

தொடக்கப்பள்ளியின் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கிய முன்னாள் எம்.பி., டி.கே.ரங்கராஜனுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்

சிவகங்கை, ஏப்.16-  சிவகங்கை மாவட்டம். காளை யார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தனியார் பங்களிப்புடன் ரூ35 இலட்சம் மதிப்  பீட்டில் கட்டப்பட்டுள்ள 05 வகுப்  பறை கட்டிடங்களையும் மற்றும் கல்லல் ஊராட்சி ஒன்றிய துவக் கப்பள்ளியில் நூற்றாண்டு விழா வில் பங்கேற்று, தனியார் பங்க ளிப்புடன் புதிதாக கட்டப்பட்டுள்ள நூற்றாண்டு நுழைவுவாயில் மற் றும் பள்ளி கலையரங்கத்தினையும் ஏப்ரல் 16 அன்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரிய கருப்பன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட் சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி  தலைமை வகித்தார்.

 இதில் அமைச்சர் பெரியகருப்  பன் பேசுகையில், எதிர்கால சந்ததி யினர்களாகிய மாணாக்கர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கான எண்ணற்ற திட்  டங்களை வழங்கி வருவது மட்டு மன்றி, அவர்கள் சிறப்பான முறை யில் பயில்வதற்கு ஏதுவாக, பள்ளி களில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி வரு கிறார்கள். அந்தவகையில், அந்  தந்தப் பகுதிகளுக்குட்பட்ட பல் வேறு தன்னார்வலர்களுடன் அரசு டன் இணைந்து தங்களது பங்க ளிப்பை ஏற்படுத்திடும் பொருட்டு, தங்களால் இயன்ற அளவிலான நிதியுதவியினை அளித்து உதவி வருகிறார்கள். அதன்படி, காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, ஊராட்சி ஒன்றிய தொடக்  கப்பள்ளி கடந்த 115 ஆண்டு களுக்கு முன்னதாக தொடங்கப்  பட்டதாகும். ஓலைக்கொட்டகை யில் தொடங்கப்பட்டு, அதன் பின் னர் ஓடுகள் அமைத்தும், தற்போது கான்கிரீட் அமைத்து, அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய  பள்ளியாக 500 மாணாக்கர்கள் பயி லுகின்ற வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. மேலும், இன் றையதினம் இப்பள்ளியில் கட்டிடத் திறப்பு விழா, விளையாட்டு விழா  மற்றும் 115-வது ஆண்டு விழா  முப்பெரும் விழாவாக சிறப்பாக  கொண்டாடப்பட்டு வருகிறது.  இப்பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாண வர்கள் தற்போது உயர்ந்த நிலை யில் இருந்து வருவது குறித்து, இங்கு எடுத்துரைத்தனர்.

மேலும், இப்பள்ளியின் மேம்  பாட்டிற்கென அரசால் மேற்  கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை கள் மட்டுமன்றி, முன்னாள் மாநி லங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் அவர்களும், தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.35  லட்சம் நிதியினை 5 கூடுதல் வகுப்ப றைகள் கட்டுவதற்கென வழங்கி யும், அதேபோன்று நவீன கழிவறை கள் மற்றும் பேவர் பிளாக் பதிப்ப தற்கென முன்னாள் எம் எல்ஏ.வி. ராஜசேகரன் ரூ.16 லட்சம் நிதியினை நன்கொடையாக வழங்கியும் அவர்களது பங்களிப்பை ஏற் படுத்தியுள்ளார்கள். அவர்களுக்கு  எனது மனமார்ந்த நன்றியினை தெரி வித்துக் கொள்கிறேன். சிவகங்கை மாவட்டத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதற் கென மேலும் பல்வேறு உதவி களை தொடர்ந்து அரசுடன் இணைந்து செய்திட அன்புடன் கேட்டுக் கொள்  கிறேன் என்று  தெரிவித்தார்.

கல்லல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழாவில்  10-ஆம் வகுப்பில் முதல்  மூன்று இடங்களைப் பெற்ற  மாணவியர்களுக்கு கொடை யாளர் பங்களிப்பில் வழங்கப்படும் ஊக்கத்தொகையுடன், தனது சொந்த நிதியிலிருந்தும் மாண வியர்களுக்கு ஊக்கத்தொகை யாக முதல் பரிசு ரூ.5 ஆயிரம் இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம் மற்  றும் மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம்  ஊக்கத்தொகையினை கூட்டு றவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் மாணவியர் களுக்கு வழங்கினார். மேலும், மாநில அளவில் சிலம்பம் போட்டி யில் இரண்டாம் இடம் பெற்ற மாண வனுக்கு ரூ.2 ஆயிரம் ஊக்கத்  தொகையினையும், திருக்குறள் சொல்லி சிறப்பித்த 2 குழந்தை களுக்கு தலா ரூ.2 ஆயிரம் ஊக்கத்  தொகையாகவும் மாணாக்கர் களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.சுவாமிநாதன். கல்லல் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சொர்ணம் அசோ கன், கல்லல் ஊராட்சி மன்றத்தலை வர் இராம.நாச்சியப்பன், திருப்பு வனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், மாவட்ட தொடக்  கக்கல்வி அலுவலர் கோ.முத்துச்  சாமி (சிவகங்கை), காளையார்  கோயில் கிழக்கு தொடக்கப்பள்ளி தலைமை ஆசரியர் தாமஸ்அம லநாதன், வட்டாரக் கல்வி அலு வலர்கள் மற்றும் தலைமையாசிரி யர்கள் மற்றும் பள்ளி ஆசிரி யர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.