districts

img

11,197 சுயஉதவிக்குழுவினருக்கு ரூ.18.24 கோடி கடன் தள்ளுபடி சான்று அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்

விருதுநகர், மார்ச் 16- விருதுநகர் மாவட்டம், எம்.ரெட்டியபட்டி, மல்லாங் கிணறு, ஆர்.ஆர்.நகர் மற்றும் சிவகாசி ஆகிய இடங்களில்  கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  1108 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 11,197 பயனாளி களுக்கு ரூ.18.24 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்று களையும், 67 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 876 பய னாளிகளுக்கு ரூ.4.215 கோடி மதிப்பிலான புதிய கடனுதவி களையும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்த கத் துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகுமார்,  சட்ட மன்ற உறுப்பினர்கள் சீனிவாசன்( விருதுநகர்), ரகுராமன்  (சாத்தூர்) ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.