மதுரை, ஏப்.2- தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயி றன்று (ஏப்.2) ஈஸ்டர் பண்டிகை யின் முக்கிய நிகழ்வான குருத் தோலை ஞாயிறை முன்னிட்டு, குருத்தோலை பவனி நடைபெற் றது. கிறிஸ்தவ மக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதிலி ருந்து ஏழு வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடை பிடிக்கின்றனர். ஈஸ்டர் பண்டி கைக்கு முந்தைய வாரம் குருத் தோலை ஞாயிறாகக் கடைப்பிடிக் கப்படுகிறது. இந்த நாளில், கிறிஸ் தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாகச் சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம். ஜெருசேலம் நகரில் கோவேறு கழுதையில் பவனியாக வந்த இயேசு கிறிஸ்துவை அங்கி ருந்த மக்கள் குருத்தோலைகளு டன் வரவேற்று, “தாவீதின் குமா ரனுக்கு ஓசன்னா” என்று முழங்கி யதை நினைவுகூறும் வகையில் இந்த குருத்தோலை ஞாயிறு கடை பிடிக்கப்படுகிறது. தமிழகம், கேரளம் போன்ற தென் மாநிலங்களில் தென்னங் குருத்துக்களை நேரடியாக மரத்தி லிருந்து வெட்டிக் கொண்டு வரு வார்கள். ஒலைகளைத் தனித்தனி யாகப் பிரித்து மக்களுக்குக் கொடுப்பார்கள். பலரும் சிலுவை வடிவத்தில் ஓலைகளை மடித்துக் கொள்வார்கள். சிலர் விதவிதமான வடிவங்களில் ஓலைகளைக் கீறிப் பின்னிக்கொள்வார்கள். குறிப் பாக, சிறுவர்கள் இதில் உற்சாகத் தோடு கலந்துகொள்வார்கள்.
அந்த நாளை நினைவுகூரும் வகையில் நாகப்பட்டினம் மாவட் டம் வேளாங்கண்ணி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சென்னை, மதுரை, திருச்சிராப் பள்ளி, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட் டங்களில் கிறிஸ்தவ தேவாலயங்க ளில் ஞாயிறன்று (ஏப்.2) குருத் தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட் டது. குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி நகரின் முக்கியப் பகுதி களின் வழியாக ஓசன்னா கீதங்க ளைப் பாடியபடி கிறிஸ்தவ மக்கள் பவனியாக வந்தனர். பின்னர் தேவா லயங்களில் சிறப்புத் திருப்பலி களும் நடைபெற்றன. கிறிஸ்தவ மக்கள் தவக் காலத்தை கடைப்பிடிக்கும் இறுதி வாரமான இன்று (ஏப்.2) குருத் தோலை ஞாயிறும், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி புனித வியாழனும், ஏப்ரல் 7-ஆம் தேதி புனித வெள்ளி யும் கடைப்பிடிக்கப்படும். ஏப்ரல் 9-ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும். இயேசு தம் சீடரோடு ஜெருச லேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என் னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அனுப்பி, “நீங்கள் உங்க ளுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாரா வது உங்களிடம் ஏதேனும் சொன் னால், ‘இவை ஆண்டவருக்குத் தேவை’ எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பி விடுவார்” என்று கூறியதாக உரைக் கிறது பைபிள்.