districts

img

நீதி அமைப்பும் சமூக நீதிக்கு இடையூறு: நீதிபதி கே. சந்துரு பேச்சு

களமசேரி, செப்.27- நீதி அமைப்பும் சமூக நீதிக்கு இடை யூறு செய்வதாக சென்னை உயர் நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு கூறினார். சமூக அமைப்புகளின் கூட்டங்க ளில் நீதிபதிகள் பங்கேற்பது, தலித் பிற் படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கு எதி ராகப் பேசுபவர்களை விதிமுறைகளை மீறி உயர் நீதிமன்றத்துக்கு உயர்த்துவது என பல முறைகேடுகள் நமது நிர்வாக அமைப்பில் புகுந்துள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.   கேரளத்தில் களமசேரியில் உள்ள தேசிய உயர் சட்டக் கல்வி பல்கலைக் கழகம் (NUALS) ஏற்பாடு செய்திருந்த தாக்சாயணி வேலாயுதன் நினைவு கூட்டத்தில் அவர் உரை நிகழ்த்தினார். அப்போது அவர், பொருளாதாரத்தில் பின் தங்கிய இடஒதுக்கீடு அல்லாத பிரிவின ருக்கு அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் இடஒதுக்கீடு வழங்குவதை அரசியல் சட்டத்திற்கு முரணாக மட்டுமே பார்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் கேரள சட்டம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் பேசு கையில், அரசியல் நிர்ணய சபையில் பெண்கள் சிறப்பாக செயல்பட்டதாகவும், அதில் தாக்சாயணி  வேலாயுதன் முன்ன ணியில் இருந்ததாகவும் தெரிவித்தார். கேரள சமூகம் அவர்களின் பங்களிப்பு களை பாதுகாக்க தவறிவிட்டது. அவர் அரசியல் நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக் கப்பட்ட ஒரு தலித் பெண் என்பது கூட நாடாளுமன்றத்தில் பலருக்கு புதிய அறிவாக இருந்தது. இன்று மக்களவையில் ஒரு தலித் பெண் கூட இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கடவுளின் பெய ரைச் சேர்க்க வேண்டும் என்றும் இந்தி யாவை இந்துஸ்தான் என்று அழைக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது, ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. இதில்  குறிப்பிடத்தக்க தலையீடு செய்த பெண்க ளில் தாக்சாயணி வேலாயுதன் முதன்மை யானவர் என்றும் அமைச்சர் கூறினார். நிகழ்வுக்கு துணைவேந்தர் பேராசிரியர். கே.சி.சன்னி தலைமை வகித்தார். தாக்சாயணி வேலாயுதனின் மகள் சமூக விஞ்ஞானி மீரா வேலாயுதன், மகன்  முன்னாள் தூதர் கே.வி.பகீரத், பேராசிரி யர். டாக்டர் எஸ் மினி, சமூக நீதிக்கான இடைநிலை மையத்தின் இயக்குநர். கே.அபயச்சந்திரன், மாணவர் பேரவை தலைவர் ஃபஹத் அப்துல் ரஹ்மான், மாணவர் ஒருங்கிணைப்பாளர் சாண்ட்ரா சுனில் ஆகியோர் பேசினர்.