districts

img

பெண் சிசு கொலை விவகாரத்தில் தனி கவனம் எடுத்து விசாரணை: கீதா ஜீவன் உறுதி

மதுரை, டிச.29- மதுரை கே.கே.நகர் பகுதி யில் உள்ள சமூக பாதுகாப்புத் துறையின் தென் மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தை சமூக நலன் -மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் புதனன்று திறந்து கி வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், சமூக பாதுகாப்பு துறை மூலம் துணை இயக்குநர் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இது தமி ழக முதல்வர் நிதிநிலை அறிக்கை யில் அறிவிக்கப்பட்டது. தென் மாவட்டங்களுக்கு உட்பட்ட 19 மாவட்டங்களில் உள்ள குழந்தை கள், பெண்களுக்கு ஏற்படும் பிரச் சனைகளுக்கு நடவடிக்கை எடுக்க இந்த அலுவலகம் செயல் படும். சிசு கொலையை தடுக்க விழிப்புணர்வு குழு அமைக்கப் பட்டு கண்காணிக்கப்படும். உசி லம்பட்டியில் பெண் சிசு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தனி கவனம் எடுத்து விசாரணை நடத்தப்படும். பெண் சிசு கொலை கள் அதிகம் பதிவாகியுள்ள உசி லம்பட்டி பகுதியில் இனி சிசு கொலைகளை தடுக்க தனி குழு  அமைத்து விழிப்புணர்வு செய்து கண்காணிக்கப்படும் என்று தெரி வித்தார். நிகழ்ச்சியில் வணிகவரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி,  மாவட்ட ஆட்சியர் எஸ். அனிஸ் சேகர், மாநகராட்சி ஆணையா ளர் க. பா. கார்த்திகேயன், சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதி காரிகள் கலந்துகொண்டனர்.