திருச்சுழி, ஏப்,3- விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், நரிக்குடி அருகே உள்ள ஆனைக் குளம் கிராமத்தில் கலை யரங்கத்தை தொழில் முத லீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். நரிக்குடி அருகே உள்ளது ஆனைக்குளம் கிராமம். இங்கு கலை யரங்கம் கட்டித்தர வேண்டு மென அப்பகுதி பொது மக் கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுதது. ரூ.7.50 லட் சத்தை சட்டமன்ற உறுப்பி னர் நிதியின் மூலம் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு -வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒதுக்கீடு செய்தார். இந்நிலையில் அப்பணிகள் நிறைவ டைந்தன. இதையடுத்து. கலையரங்கை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.