districts

img

அதிமுக-பாஜக இடையே நடப்பது குழாயடிச் சண்டை

இராஜபாளையம், செப்.23- அதிமுக-பாஜக இடையே குழாயடிச் சண்டை நடைபெற்று வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற் குழு உறுப்பினர் கே.பாலபாரதி கூறியுள்ளார். பாஜக அரசின் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண் டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்ச னைகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  இராஜபாளையத்தில் பொதுக்கூட் டம் நடைபெற்றது.  நகரச் செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். மேரி, பால மஸ்தான் முன்னிலை வகித்தனர். முருகானந்தம் வரவேற்றார். மாநி லச் செயற்குழு உறுப்பினர் கே. பாலபாரதி சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூ னன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் குருசாமி, மாவட்டக் குழு உறுப்  பினர்கள் இராமர், ஜோதிலட்சுமி, மூத்த தோழர் கணேசன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் கே.பாலபாரதி பேசு கையில், ‘‘1996-ஆம் ஆண்டு மக ளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு  வரப்பட்டது. ஆனால், இப்போது தூசி தட்டி 27 ஆண்டுகளுக்கு பிறகு  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்த மசோதா 2024 தேர்தலில் செயல்படுத்தப்படாது. மக்கள் தொகை கணக்கெடுப்பு  நடத்தி, தொகுதி வரையறை செய்து, ஓபிசி, பட்டியல் இனத்த வர், சிறுபான்மையினர் வரையறை  முடிந்து 2029-இல் அமலுக்கு வரும். ஆனால் வராது.  பாஜக ஆட்சியில் மாநில அரசு களின் உரிமைகளை பறிக்கும் அரசி யல் நடைபெற்று வருகிறது. செஸ்  வரி 26 சதவீதம் வரை வந்துவிட் டது. அதன்மூலம் 2021-22ல் ரூ. 4,78,000 கோடி வருவாய் வந்துள் ளது. இதில் மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டிய அவசிய மில்லை என ஒன்றிய அரசு கூறு கிறது. ரூ.4 லட்சம் கோடி மாநில அரசுகளுக்கு தரவேண்டிய ஈவுத் தொகையை ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை (நடை)பயண தின் போது பணம் கொடுத்து தொண்  டர்களை விலைக்கு வாங்கி கூட்டம்  சேர்த்து வருகிறார். விலைவாசி உயர்வு குறித்து அண்ணாமலை ஏதாவது பேசுகிறாரா? ஆனால், தற்  போது அதிமுக-பாஜக இடையே குழாயடிச் சண்டை போல் நடை பெற்று வருகிறது.  பாஜக அரசு ஊழல் குறித்து மத்திய தணிக்கைக் குழு சார்பில் ஆதாரத்துடன் அறிக்கை முன் வைத்தது. ஒன்றிய அரசுக்கு ரூ.17  லட்சம் கோடி வரை பற்றாக்குறை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டை முன்வைத்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் துவா ரகா சாலை போடுவதற்கு ஒரு கி.மீ.க்கு ரூ.250 கோடி வரை செலவு  செய்து உள்ளதாக கணக்கில் உள்  ளது.  வங்கிகள் தனியார் மய மாக்கப்பட்டு வருகிறது. பிஎஸ் என்எல் ஒரு வகையாக முடிந்து போய்விட்டது. காப்பீடு ஊழல், சுகாதாரம் உள்பட பல்வேறு துறை களில் ஊழல் கொடிகட்டிப் பறக்கி றது என தணிக்கைக் குழு அறிக்கை  சமர்ப்பித்துள்ளது. இதற்கு மோடி  என்ன பதில் சொல்லப் போகிறார்’’ எனக் கேள்வி எழுப்பினார்.