சேலம், நவ.28- சாலைகள் அமைப்பதற்கு எடுக்கப் பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்க நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியும், பத்து ஆண்டு கள் ஆகியும் இதுவரை இழப்பீடு வழங்க வில்லை என சேலம் மாவட்ட ஆட்சியரி டம் விவசாயிகள் மனு அளித்து குமு றலை வெளிப்படுத்தினர். சேலம் முதல் உளுந்தூர்பேட்டை என்எச் 69 (NH 69) தேசிய நெடுஞ்சாலை 136 கிலோ மீட்டர் சாலை விரிவாக்கம் செய்யப்படுவதற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு 4600 ஏக்கர் விவசாய நிலங்கள் எடுக்கப்பட்டது. அப்பொழுது அதற் காக அரசு சொற்ப அளவிலேயே இழப் பீடு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் நிலங்கள் விற்பனையாகும் தொகையை இழப்பீடாக வழங்க வலியு றுத்தி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி பத்து ஆண்டுகள் ஆகியும் அரசு இதுவரை கூறிய இழப் பீடு வழங்கவில்லை. உரிய இழப்பீடு கேட்டு விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக திங்களன்று சேலம் ஆட்சியர் அலுவல கத்தில் நீதிமன்ற உத்தரவின் படி இழப் பீடு தொகை வழங்க வலியுறுத்தி பாதிக் கப்பட்ட விவசாய சங்கத்தின் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங் கினர். மேலும் விவசாயிகள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் நிலம் கொடுத்த எங்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. இந்த திட்டத்தினால் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயி கள் பாதிக்கப்பட்டோம். 10 ஆண்டு களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயி கள் உயிரிழந்துள்ளனர். அரசு மீதம் உள்ளவர்களுக்காகவாவது இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.