districts

img

வெம்பக்கோட்டை அகழாய்வில் கருங்கல், செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்கள் கண்டுபிடிப்பு

வெம்பக்கோட்டை, செப்.1- வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய் வில் செங்கற்கள் மற்றும் கருங்கற்களால் கட்டப்பட்ட சுவர்கள் கண்டறியப்பட் டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தங்க அணிகலன், தங்கத் தாலி, ஆண் உருவ சுடுமண் பொம்மை, யானை தந்த பக டைக்காய், சுடுமண் அகல் விளக்கு, சுடுமண் வணிக முத்திரை சுடுமண்ணால் ஆன வட்ட வடிவ தட்டு,  அணிகலன், பச்சை மற்றும் வெள்ளை நிற பாசி மணி கள், சங்கு, துதியாளி பொறிக்கப்பட்ட வேணாட்டு சிற்றரசு கால செப்பு நாணயம் உள்ளிட்ட எண்ணற்ற வகையிலான தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், தற்போது செங்கற்களால் ஆன 2 மீட்டர் நீளம் கொண்ட சுவரும் மற்றொரு அகழாய்வு குழியில் கருங் கற்களால் ஆன வட்ட வடிவ சுவரும் கண்டறியப் பட்டுள்ளது. மேலும் சுவரின் முழுமையாக கண்டறியும் பணி நடைபெற்று வரு கிறது. இது, இப்பகுதியில் வாழ்ந்த தொன்மையான மனிதர்களின் குடியிருப்பு அல்லது தொழில் கூடத்தின் சுவராக இருக்கலாம் என தொல்லியல் துறை இயக்கு நர் பாஸ்கர் தெரிவித்துள் ளார்.