மதுரை, மார்ச் 5- விவசாயிகள், தொழில் வர்த்தகர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரியவற்றை நிறைவேற்றித் தருவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவ கங்கை மற்றும் தேனி மாவட்டங்களின் தொழில் மற்றும் வணிக சங்கப் பிரதிநிதிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிறன்று மதுரையில் கலந்துரையாடினார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை, இராமநாத புரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களைச் சார்ந்த தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம், இராம நாதபுரம்-சிவகங்கை வைகைப் பாசன விவ சாயிகள் சங்கம், வட்டார விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு, பாரம்பரிய மீனவர் சங்கம், துறைமுக விசைப்படகு சங்கம், வர்த்தக சங்கங்கள், அய்யம்பாளையம் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனம், ஒட்டன்சத்திரம் வட்டார விவ சாயிகள் சங்கம், பெரியகோட்டை வட்டார விவ சாயிகள் சங்கம், சிறுதொழில் நிறுவனங்களின் சங்கங்கள், கோகோ கிரீன் சப்ஸ்ட்ராக்ட்ஸ், முல்லைப் பெரியாறு-வைகை ஆறு நீரினைப் பயன்படுத்துவோர் மற்றும் விவசாயிகள் சங்கம், தேனி மாவட்ட கோராப்பட்டு உற்பத்தி யாளர்கள் சங்கம், தேனி மாவட்ட சுருளிப்பட்டி திராட்சை விவசாயிகள் சங்கம் போன்ற சங்கங்க ளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அவர்க ளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மதுரை ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர், திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன், தேனி ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, இராம நாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், சிவ கங்கை ஆட்சியர் ப.மதுசூதன்ரெட்டி உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள், காவல்துறை அதிகாரி கள் பங்கேற்றிருந்தனர். கலந்துரையாடலின் போது தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் நிர்வாகிகள், தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை 2030-ஆம் ஆண்டிற் குள், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக வளர்ச்சியடைய பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவ தற்கும், தென் தமிழகம் தொழில் வணிகத்தில் ஏற்றம் கண்டு, பொருளாதார வளர்ச்சியில் முன் னேற்றம் காண சிறப்புக் கவனம் செலுத்தி வரு வதற்காகவும் முதல்வருக்கு பாராட்டும் நன்றி யும் தெரிவித்தனர்.
சக்கிமங்கலம் சிட்கோ தொழில் பூங்கா
மேலும், மதுரையில் புதிய சக்கிமங்கலம் சிட்கோ தொழில் பூங்கா அமைக்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கான ஓடதள விரி வாக்கப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். மதுரையில் மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் நிர்வாகி கள் முதலமைச்சரைக் கேட்டுக் கொண்டனர். மதுரை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் கள் சங்கத்தினர், “மதுரையில் உருவாக்கப் படும் மாஸ்டர் பிளான் திட்டத்தில் சிறு, குறுந் தொழில்களுக்கு 15 சதவீத நிலத்தை தொழிற் சாலை நிலமாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகித மானியத்தை குறைக்க வேண்டும்” என்றனர்.
திண்டுக்கல்லில் காய்கறி-பூ மார்க்கெட்
திண்டுக்கல்லில் உள்ள சிறுமலை பகுதி யை மேம்படுத்தி சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும். பழனி–கொடைக்கானல் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பின் தங்கிய பகுதிகளான எரியோடு, குஜிலி யம்பாறை பகுதிகளில் தொழிற்பேட்டை அமைத்து, ஒன்றிய அரசின் இரயில்வே மற்றும் இராணுவத் துறைகளுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். உலகப் பிரசித்தி பெற்ற திண்டுக்கல் பூட்டு மற்றும் இரும்புபெட்டி தொழில்களை சந்தைப்படுத்த அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். திண்டுக்கல் மாநகரில் பெரிய அள வில் ஒருங்கிணைந்த காய்கறி, பூ மார்க்கெட் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திண்டுக்கல் வர்த்தகர்கள் சங்கத்தினர் கேட்டுக்கொண்டனர்.
தோட்டக்கலைக் கல்லூரி
ஒட்டன்சத்திரம் பகுதியில் தோட்டக்கலைக் கல்லூரி அமைக்கவேண்டும், காவிரி-வைகை- குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். திண்டுக்கல் மாவட் டத்தில் தென்னை சார்ந்த ஒருங்கிணைந்த மதிப்புக்கூட்டு மையம் அமைக்க வேண்டும். திராட்சை விவசாயிகள் பந்தல் அமைக்க மானி யம், கூட்டுறவு சங்கங்கள் மூலம் மானிய விலை யில் உரங்கள் வழங்கவேண்டுமென விவசாயி கள் சங்கங்களின் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர். தேனி மாவட்டத்தில் மாங்காய் கூழ் செய்யும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்
1500 யூனியன் கண்மாய்களை தூர்வாருக!
தூர்வாருக! இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சுமார் 1500 யூனியன் கண்மாய்களை தூர்வாரி பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், இராமநாதபுரம் மாவட்டத்தில் நவீன அரிசி ஆலை அமைக்க வேண்டுமெனவும் விவசாயி கள் கேட்டுக்கொண்டனர்
தங்கச்சிமடத்தில் தூண்டில் வளைவு -துறைமுகம்
“தங்கச்சிமடம் வடக்குக் கடற்கரையில் தூண்டில் வளைவுடன் கூடிய துறைமுகம் அமைக்க வேண்டும். பாம்பன் பகுதியில் உள்ள குந்துகால் மீன்பிடி இறங்குதளத்தை ஆண்டு முழுவதும் பயன்படுத்த அலை தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். மீனவர்களுக்கு வழங்கப் படும் மானிய டீசல் அளவை உயர்த்தி வழங்க வேண்டும். இராமேஸ்வரத்தில் மீன்பிடிப் படகுகள் நிறுத்தி வைக்க புதிய மீன்பிடித் துறை முகம் அமைக்க வேண்டும்” என பாரம்பரிய இந்திய மீனவர் நலச்சங்கத்தினர் கேட்டுக் கொண்டனர். இலவம் பஞ்சிற்கான ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பட்டு-பருத்தி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கேட்டுக்கொண்டனர்.
“நம்பிக்கையோடு செல்லுங்கள்”
கோரிக்கைகளைக் கேட்டறிந்த முதல மைச்சர், அவற்றைப் பரிசீலித்து உரியவற்றை நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார். “குறு, சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக சில முக்கிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அதை பரிசீலிப்போம். ஏற்கனவே தென் மாவட்டங்க ளின் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு சில மாதங்களுக்கு முன் அதற்கான தனி ஆலோசனைக் கூட்டத்தைக்கூட மதுரையில் நடத்தினோம். அப்படி நடத்தியதற்குப் பிறகு அதன் தொடர்ச்சியாக பல மேல் நடவடிக்கை களெல்லாம் எடுக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகள் சார்பாக சில முக்கிய கருத்து களையும் தெரிவித்துள்ளீர்கள். அதை கவன முடன் நாங்கள் குறித்துவைத்துக் கொண்டி ருக்கிறோம். அவற்றின் மீது உரிய நடவடிக்கை யை நிச்சயமாக நாங்கள் எடுப்போம். விவசாயிகளுக்கான தனி பட்ஜெட்டை தயா ரிக்கும்போது கூட, அந்தத் துறையின் அமைச்சர், அந்தத் துறையின் அதிகாரிகள், மண்டலம் வாரி யாகச் சென்று விவசாய சங்க பிரதிநிதிகளை யெல்லாம் அழைத்து, கலந்துபேசி அவர்களு டைய கருத்துக்களை கேட்டுத்தான் வேளாண்மைத் துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்
. நீங்கள் வைத்திருக்கக்கூடிய அந்த கோரிக்கைகளையும் நிச்சயமாக பரி சீலித்து. உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேனி மாவட்ட தோட்டக்கலை பயிர் விவ சாயிகள் முக்கியமான கருத்துக்களை, கோரிக் கைகளை முன் வைத்திருக்கிறீர்கள். அதையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்போம். இராமநாதபுரம் மாவட்ட பகுதியைச் சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கை களை தெரிவித்திருக்கிறீர்கள். அதையும் அரசு பரிவோடு பரிசீலிக்கும். எந்த நம்பிக்கையோடு வந்தீர்களோ அந்த நம்பிக்கையோடு செல்லுங்கள், அந்த நம்பிக்கையோடு காத்திருங்கள். அந்த நம்பிக் கைக்கு பாத்திரமாக நிச்சயமாக நாங்கள் இருப்போம். ஆட்சிக்கு வந்தபோது நிதிநிலை எப்படி இருந்தது என்று உங்களுக்குத் தெரியும், எவ்வளவு கடுமையான சூழ்நிலை யில் ஆட்சிப் பொறுப்பேற்றோம். கொரோனா ஒரு பக்கம், நிதிநிலை ஒரு பக்கம். இதை யெல்லாம் சமாளித்து ஓரளவு பணி செய்து கொண்டிருக்கிறோம். அறிவித்த எல்லா திட்டங்களையும் நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்லவில்லை. இன்னும் சில திட்டங்கள் மீதம் இருக்கிறது. அதையும் நிறைவேற்றக் கூடிய சூழ்நிலையில் தான் எங்களுடைய பணி அமைந்திருக்கிறது. உங்கள் கோரிக்கைகள் நிச்சயமாக, படிப்படியாக, உறுதியாக நிறை வேற்றப்படும்” என்று முதல்வர் பேசினார்.