தென்காசி ,மே 11 தென்காசி மாவட்டத்தில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் முதல் கட்டமாக அருவி பகுதி களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற் கொள்வதற்காக வியாழனன்று நடை பெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பழைய குற்றாலம், பிரதான அருவி, ஐந்தருவி, சிற்றருவி மற்றும் புலி அருவி ஆகிய பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற் கொள்ளபட உள்ளன. தற்போது பிரதான அருவிப்பகுதிகளில் பணிகள் துவக்கப்பட உள்ளன.அப்பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் உடை மாற்றும் அறை, ஆண் கள் மற்றும் பெண்கள் கழிப்பறை, தோரண வாயில் புதுப்பித்தல், பாதை சீரமைத்தல், சிறுவர் பூங்கா மேம்பாடு மற்றும் குற்றா லம் பேரூராட்சி ஆலோசனையுடன் அடிப் படை தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகிய பணிகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் செயல்படுத்தப்படும். தொ டர்ந்து மற்ற பகுதிகளிலும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு சுற்றுலாப் பயணிகள் பயன்பெறுவார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரி வித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி ,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலா ளர் டேவிட் பிரபாகரன், உதவி செயற்பொறி யாளர் சீனிவாசன், சுற்றுலா அலுவலர் சீதாராமன், மண்டல சுற்றுலா வளர்ச்சி குழு உறுப்பினர் .டாக்டர் கார்த்திக் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.