இராமநாதபுரம், நவ.7- இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியம், மேல்பனை யூர் கிராமத்தில் நவம்பர் 7 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் பொதுமக்களை நேரில் சந்தித்து குறை களைக் கேட்டறிந்தார். இந்த நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களிடம் அந்தப்பகுதி யில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், குடிநீர் சீராகக் கிடைக்ககிறதா என்பது தொடர்பாகவும், நியாயவிலைக் கடை களில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் சீராக கிடைக்கப்பெறுகிறதா என கேட்ட றிந்தார். தமிழக அரசின் மூலம் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கிரா மப்புறங்களில் உள்ள பொதுமக்கள் பயன் பெறும் வகையில் குறிப்பாக மகளிர் பொரு ளாதார ரீதியாக பயன்பெறும் வகையில் மானியத்துடன் கடனுதவிகள் வழங்கப் பட்டு சுயதொழில் புரிந்திடும் வகையில் திட் டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் மழைக்காலம் துவங்கியதை யொட்டி, கூட்டுறவுத்துறையின் மூலம் விவ சாயிகளுக்கு தேவையான பயிர் கடனு தவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி களில் போதியளவு விதைகள், உரங்கள் விவசாயிகளுக்கு வழங்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. விவசாயிகள் விவசாய பணி களை முழுமையாக மேற்கொள்ள வேண் டும். வேளாண்மைத்துறையின் மூலம் தேவையான உபகரணங்கள் மற்றும் ஆலோ சனைகளை வழங்க அறிவுறுத்தப்பட் டுள்ளது. அதுமட்டுமின்றி களப்பணியில் வேளாண் உதவி திட்ட அலுவலர்கள் ஈடு பட்டு வருவார்கள். விவசாயிகள் தக்க ஆலோசனைகளை பெற்று விவசாயப்பணி களை மேற்கொள்ள வேண்டும். மேலும் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு காய்ச்சிய குடி தண்ணீரை பயன் படுத்துவதுடன், காய்ச்சல் போன்ற அறிகுறி கள் இருந்தால் அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய மருத்துவச்சிகிச்சை மற்றும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி இருந் திட வேண்டும். அதேபோல் மருத்துவக் குழு அவ்வப்போது சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் உரிய சிகிச்சை பெற்று மழைக்காலத்தில் நோய் தொற்றின்றி உடல் ஆரோக்கியத்து டன் இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். இந்நிகழ்வில் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் சி.சுவாமிநாதன், ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் இராஜேந்திரன், மேல்பனையூர் ஊராட்சி மன்ற தலைவர் கோபிநாத் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.