பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் முதல்வர் உத்தரவு
விருதுநகர், ஏப்.16- விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது ஆனையூர் கிராமம். இங்கு இயங்கிவந்த தனியார் பட்டாசு ஆலையில் சனிக்கிழமையன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் இடையன்குளத்தைச் சேர்ந்த தங்கவேலு( 65) மற்றும் கருப்பசாமி (28) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், கருப்பம்மாள் என்ற பெண் தொழிலாளி படுகாயமடைந்தார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவா ரணம் அறிவித்துள்ளார். அதில், உயிரிழந்த தொழிலா ளர்களின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர் களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளருக்கு ரூ.50 ஆயிரமும் முதல மைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.
வைகை அணை நீர்மட்டம் குறைந்தது
தேனி, ஏப்.16- நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழையின்றி வைகை அணையின் நீர் மட்டம் 54 அடியாக குறைந்துவிட்டது ஆனால் கோடைகாலம் தொடங்கியதில் இருந்து மழைப் பொழிவு இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து கடு மையாக குறைந்தது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் நீர்மட்டம் தற்போது மழை இல்லாததால் 54 அடியாக குறைந்துள்ளது. இதனால் வரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
பைக் திருடியவர்கள் கைது
அருப்புக்கோட்டை, ஏப்.16- அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் பணிபுரி பவர் ஆனந்தகுமார். இவர் காந்திநகரில் உள்ள உண வகம் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி ருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது தொடர்பாக அவர் அருப்புக்கோட்டை நகர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் திருட்டு நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளை திருடியது கல்லூரணி யை சேர்ந்த பெருமாள் மகன் முரளிதரன், நாகூர்கனி என தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், மோட்டார் சைக்கிளை மீட்டனர்.
பழனி கோவில் காணிக்கை ரூ.4.71 கோடி
பழனி, ஏப்.16- பழனி மலைக்கோவிலில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக 4 கோடியே 71 லட்சத்து 96 ஆயிரத்து 703 ரூபாயும் தங்க மாக 1098 கிராம் வெள்ளியாக 18,622 கிராம் வெளிநாட்டு கரன்சி 810 நோட்டுகளும் கிடைக்கப் பெற்றன. உண்டியல் திறப்பு மற்றும் எண்ணிக்கை கோவில் இணை ஆணையாளர் நடராஜன் முன்னிலையில் நடை பெற்றது. இதில் கோவில் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
பெரியகுளம் கலவரத்தில் அப்பாவிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது
தேனி ஆட்சியிடம் விசிக கோரிக்கை
தேனி, ஏப்.16- பெரியகுளத்தில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் .அப்பாவிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு அளித்தனர். தேனியில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் நாக ரத்தினம் மற்றும் நிர்வாகிகள் ஆட்சியரி டம் மனு அளித்தனர். அதில் தெரிவித்துள்ளதாவது:பெரியகுளத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை முன் னிட்டு, காவல் துறை யினர் நிர்ணயித்தி ருந்த நேரத்தில் டி.கள்ளிபட்டி கிராம மக்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற போது நடைபெற்ற கலவரத்தில் காவல் நிலையம் மீதும், காவல் துறை வாக னம், அவசர ஊர்தி மற்றும் இருசக்கர வாக னங்கள் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோ திகளை, வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து முறையாக அடையாளம் காணா மல், டிகள்ளிப்பட்டியைச் சேர்ந்த இளை ஞர்கள், மாணவர்கள், அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை காண்பதற்கு கூடியிருந்த பொதுமக்களை கைது செய்யும் நட வடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவும், காவல் துறையினர் பொதுமக்களை அச்சுறுத்துவதை தடுக்க வும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்த னர்.
சு.வெங்கடேசன் எம்.பி. நிதியில் சத்துணவுக்கூட கட்டிடப் பணி துவக்கம்
மதுரை, ஏப்.16- மதுரை கருப்பாரயூரணியில் உள்ள அப்பர் அரசு உதவி பெறும் பள்ளியில் சத்துணவு சமையல் கூடம் கட்டுவ தற்காக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10லட்சம் மதிப்பீட் டில் கட்டிட பணி துவக்க விழா வெள்ளியன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், தாலு காச் எம்.கலைச்செல்வன், தாலுகா குழு உறுப்பினர் சி. பாண்டியன், மாவட்ட சேர்மன் சூரியகலா கலாநிதி, பள்ளி செயலாளர் பிகேஎம் ராஜாங்கம், தாளாளர், முதல்வர் ஆசி ரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செம்பட்டி அருகே, விலை உயர்ந்த மரம் வெட்டிக்கடத்தல்
சின்னாளப்பட்டி, ஏப்.16- திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, சீவல்சரக்கு கிராமம், செம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் இருந்து, எஸ்.கோடங்கிபட்டி செல்லும் சாலை ஓரத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலான, பழமை வாய்ந்த ஐம்பதாயிரம் ரூபாய் மதிக்கத்தக்க வாகை மரம் இருந்தது. இந்த மரத்தை மர்ம நபர்கள் சிலர் வெட்டி கடத்தி சென்று விட்டதாக புகார் எழுந்தது. அரசு அனுமதி இல்லா மல் அந்த மரம் வெட்டப்பட்டுள்தாக, புகார் எழுந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், சீவல்சரகு கிராம நிர்வாக அலுவலர் பானு, வருவாய் அலுவலர் சரவணகுமார் ஆகி யோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து, மரத்தை வெட்டிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம நிர்வாக அலுவலர் பானு, வருவாய் அலுவலர் சர வணகுமார் ஆகியோர், ஆத்தூர் தாசில்தார் சரவணனி டம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து, தாசிதார் சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.
கஞ்சா விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது
விருதுநகர், ஏப்.16- விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள நேத்தியாயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (25). கடந்த பிப்ரவரி 17 அன்று இவரிடமிருந்து 2,235 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர். மேலும், மனோகரன், தொடர்ந்து இதே குற்றச் செயலில் ஈடுபடாமல் இருக்க அவரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய மாவட்டகாவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைத்தார். இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்ட தின் பேரில் திருச்சுழி போலீசார், மனோகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.