கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் சிபிஎம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வார்டு 3 ரவிகுமார், வார்டு 7 ஜெயராணி, வார்டு 8 ஏ.ஜெயகுமார், ஆகியோருக்கு ஆதரவாக சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.முருகேசன், வட்டார செயலாளர் டி.ஜே.புஷ்பதாஸ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் என்.உஷா பாசி, சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் அல்போன்சா, அன்பு செல்வி உள்ளிட்டோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கடையால் பேரூராட்சி 4ஆவது வார்டுக்குட்பட்ட கோலிஞ்சிமடம் மலைப் பகுதியில் சிபிஎம் வேட்பாளர் வி.ரெகு வாக்குச் சேகரித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பேரூராட்சி 3 ஆவது வார்டு உறுப்பினராக போட்டியிடம் சிபிஎம் வேட்பாளர் ஜே.ஜுடஸ் குமார் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். மாவட்ட செயற்குழு ஊறுப்பினர் எஸ்சி.ஸ்டாலின்தாஸ், வட்டார செயலாளர் பி.விஸ்வாம்பரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.