districts

img

பட்டியலின பணித்தளப் பொறுப்பாளரை காலணியால் அடித்த கொடுமை

தென்காசி, பிப்.4 தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது தாருகாபுரம் ஊராட்சி.  இங்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் பணித் தளப் பொறுப்பாளராக வேளாங்கன்னி பணியாற்றி வருகிறார்.  பட்டியலினத் தை சார்ந்த இவர் வெள்ளிக் கிழமை  வேலை முடியும் நேரத்தில் தொழிலாளர் களை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்குவந்த அதே ஊரைச் சார்ந்த மற்றொரு சமூகத் தைச் சேர்ந்த மணிகண்டன்  தமது இரு சக்கர வாகனத்தை வேளாங்கண்ணியின் மீது  மோதி அரை கீழே தள்ளி விட்டு, தகாத வார்த்தையால் சாதியைச் சொல்லி திட்டி பணி செய்யவிடாமல் தக ராறு செய்துள்ளார். தொ டர்ந்து தாம் அணிந்திருந்த காலணியைக் கழற்றி வேளாங்கன்னியை அடித் துள்ளார். காதில் அணிந்தி ருந்த கம்மலையும் பறித்துள் ளார். மணிகண்டனால் தாக்கு தலுக்குள்ளான வேளாங் கன்னி புளியுங்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். புளி யங்குடி காவல்நிலையத் தில் மணிகண்டன் மீது எஸ் சி/எஸ் டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி நடவ டிக்கை எடுக்க புகார் மனு அளித்துள்ளார்.  சம்பவத்தை கேள்விப் பட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணயின் தென்காசி மாவட்டச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, நகர் செயலாளர் சீனிப்பாண்டி யன், சிஐடியு மாவட்டச்செய லாளர் மணிகண்டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாசுதேவநல்லூர் ஒன்றியச்செயலாளர் இரா.நடராஜன் ஆகியோர் மருத் துவமனைக்கு நேரில்சென்று பாதிக்கப்பட்ட வேளாங் கண்ணியை சந்தித்து நடந்த விபரங்களைக் கேட்டறிந்து ஆறுதல் கூறினர். தொ டர்ந்து புளியங்குடி காவல் துறை துணைக் கண்காணிப் பாளரைச் சந்தித்து  குற்ற வாளி மணிகண்டனை உட னடியாகக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க. வலியுறுத்தினர்.