விருதுநகர், ஜூலை 23- விருதுநகர் மாவட்டத் திற்கு வருகை தந்த 7-வது ஆசிய ஆண்கள் ஹாக்கி போட்டிக்கான கோப்பை யை மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன் வரவேற்றார். தமிழ்நாடு அரசின் சார்பில் 7- ஆவது ஆசிய ஆண்கள் ஹாக்கி போட்டி சென்னையில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான கோப்பை தமிழ்நாடு முழு வதும் எடுத்து வரப்படுகிறது. இந்த போட்டியில் இந்தியா, ஜப்பான், கொரியா, பாகிஸ் தான், சீனா மற்றும் மலே சியா ஆகிய 6 ஆசிய அணி கள் பங்கேற்கின்றன. சென் னையில் கடந்த 2007 ஆம் ஆண்டு இப்போட்டிகள் நடைபெற்றன. 16 வருடங்க ளுக்கு பிறகு தற்போது மீண் டும் நடைபெற உள்ளது. இதனை ஒன்றிய இளை ஞர் நலன் -விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஜூலை 13 அன்று தில்லியில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிலையில், விருது நகர் மாவட்டம், சிவகாசி அரசன் மாடல் பள்ளிக்கு வருகை தந்த ஹாக்கி போட்டிக்கான கோப்பை யை மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன் வரவேற்றார். பின்பு, இந்தக் கோப்பை பொதுமக் கள் பார்வைக்காக வைக் கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வழியனுப்பி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சிவ காசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், மாவட்ட விளையாட்டு அலு வலர் குமரமணிமாறன், சிவ காசி கோட்டாட்சியர் விஸ்வ நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.