தாம்பரம்,டிச.10- புயல்காரணமாக தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட மரங்கள் கீழே விழுந்தது. அதேபோல தாம்பரம் சுரங்கப்பாதை, வள்ளல் யூசுப் நகர், லட்சுமி நகர், bஜயேந்திர நகர், திருமலை நகர், தாம்பரம் காசநோய் மருத்துவமனை என பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இவற்றை மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார்கள் கொண்டு வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். புயல் காரணமாக, தாம்பரம் சுற்றுவட்ட பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழை பாதிப்பு பகுதிகளை வெள்ள தடுப்பு கண்காணிப்பு அதிகாரி ஜான் லூயிஸ், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு நிலைமையை சீர்செய்தனர்.