சிவகங்கை, மார்ச் 30- சிவகங்கை மாவட்டம் தாய மங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா மார்ச் 29 அன்று ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் கொடியேற்றி விழாக் கோலத்துடன் தொடங்கியது என்று பரம்பரை அறங்காவலர் வெங்க டேசன் செட்டியார் தெரிவித்தார் . அவர் மேலும் கூறுகையில், தென்பாண்டி நாட்டில் நீர்வளம் பொருந்திய தாயமங்கலம் கிராமத்தில் பங்குனி விழா மார்ச் 29 முதல் 10 தினங்களுக்கு நடைபெற உள்ளது. ஏப்ரல் 1,2,3,4ஆகிய தினங்கள் மண்டகப்படிதாரர்கள் நிகழ்வுகள் நடைபெறும். ஏப்ரல் 5 அன்று பொங்கல் திருவிழா சகலபகுதி மக்கள் பங்கேற்று ஆயிரக்கணக்கான வீடுகளில் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். ஏப்ரல் 6 இல் மின்சார தீப அலங்காரத்தோடு தேரோட்டம் உள்ளது. ஏப்ரல் 7அன்று பால்குடம், ஏப்ரல் 8 திருக்கோயில் தீர்த்தவாரி, ஏப்ரல் 29,30 அன்று நவசக்தி ஹோமம், லட்சார்ச்சனை, விசேச மேளக்கச்சேரி, இதர கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. அறநிலையத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை ,குடிதண்ணீர் வசதி ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று அறங்காவலர் சு.வெங்கடேசன் தெரிவித்தார்.