தென்காசி, பிப்.26- ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நெல்லை, தென்காசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை சரியாக நடத்தாமல் விதிகளுக்கு புறம்பான முறையில் நடத்திய தோடு, அதனை கண்டித்த தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளை மிரட்டிய தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாறுதல் கலந்தாய்வு நடத்திவரும் பள்ளி க்கல்வித்துறை, தொடக்கக் கல்வித் துறையை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தென்காசி மாவட்ட கிளையின் சார்பில் தென்காசி முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் செ.ரமேஷ், மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் மணி மேகலை, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் மாடசாமி, கல்வி மாவட்ட பொ றுப்பாளர்கள் சுதர்சன், மாணிக் கம், சிவகுமார், தென்காசி ராஜ் கமார் ,வட்டாரப் பொறுப்பா ளர்கள் பவுல் அந்தோணிராஜ், ஆரோக்கியராஜ், முருகேசன், வாசு மாரிமுத்து.அருள்ராஜ், கணேசன், மணிபாரதி, பூரண ராஜா, ராஜன் ஜான் உள்ளிட்ட 75 ஆசிரியர்கள் கலந்துகொண்ட னர். நெல்லை நெல்லையில் பாளை யங்கோட்டை சாராள் தக்கர் பள்ளி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்ப ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். நெல்லை கல்வி மாவட்ட செயலாளர் துரை பாக்கியநாதன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் பிரமநாயகம் வரவேற்றுப் பேசினார். சேர்மாதேவி கல்வி மாவட்ட செயலாளர் காமராஜ் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பொது மாறு தல் கலந்தாய்வில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஆசிரியர் விரோத போக்கு குறித்து மாவட்ட செயலாளர் செ.பால்ராஜ் பேசி னார். இதில், நெல்லை சேர்மா தேவி வள்ளியூர் கல்வி மாவட்டது தை சேர்ந்த பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.