மாதர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
மதுரை, மார்ச் 11- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டக்குழு கூட்டம் சனிக்கிழமை யன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவ ராக ஆர். லதா, பொருளாளராக பா. சாந்தி. துணைச் செய லாளராக விமலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் கே. பால பாரதி, மாநிலச் செயலாளர் ஆர். சசிகலா, மாவட்டச் செய லாளர் வை.ஜென்னியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் நகராட்சியில் வரி பாக்கி ரூ.10 கோடி: ஆணையர் தகவல்
விருதுநகர், மார்ச் 11- விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் பொது மக்கள் செலுத்த வேண்டிய மொத்த வரி பாக்கியாக ரூ.9.25 கோடி வரை உள்ளதாக ஆணையர் ஸ்டான்லி பாபு தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: நகராட்சியில் உள்ள குடியிருப்புகள், நிறு வனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான சொத்துவரி பாக்கியாக ரூ.3.37 கோடியும், காலியிட வரியாக ரூ.18 லட்ச மும், தொழில் வரியாக ரூ.55 லட்சமும், குடிநீர் கட்டண பாக்கியாக ரூ.1.44 கோடியும், நகராட்சி கடைகளுக்கான வாடகை பாக்கியாக ரூ.2.33 கோடியும், பாதாளச் சாக்கடை கட்டண பாக்கியாக ரூ.1.38 கோடி என மொத்தம் ரூ.9.25 கோடி ரூபாய் பாக்கியாக உள்ளது. எனவே, 36 வார்டுகளில் உள்ள பொது மக்கள், வரும் மார்ச் 15ஆம் தேதிக்குள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகைகளை செலுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வரி செலுத்தாத குடியிருப்புகளின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும். வாடகை செலுத்தப் படாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும். மேலும் செலுத்த தவறும் பட்சத்தில் ஜப்தி நடவடிக்கை மற்றும் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடரப்படும். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.
முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பிக்க தேனி ஆட்சியர் அழைப்பு
தேனி, மார்ச் 10- தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வழங்கப்படும் முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க தேனி ஆட்சியர் ஷஜீவனா அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் 2022-2023 ஆம் ஆண்டுக்கான விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் நபர் கள் கடந்த ஜனவரி 1, 2022-அன்று 58 வயது நிரம்பியவ ராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72,000 க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன் லைனில் பெறப்பட்ட வருமானச் சான்று , தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதி நிலைச் சான்று தமிழறி ஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் இலவச மாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த திட்டத் தின் கீழ் தேர்வு செய்யப்படுபவருக்கு திங்கள்தோறும் உத வித்தொகையாக ரூ.3500 ம் , மருத்துவப்படி ரூ.500-ம் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். நிறைவு செய்யப் பட்ட விண்ணப்பங்களை, தேனி மாவட்ட கலெக்டர் அலு வலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் வருகிற 31-தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும்.
கடன் தொல்லையால் லாரி உரிமையாளர் தற்கொலை
கடமலைக்குண்டு, மார்ச் 11- தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே தாழையூத்து கிரா மத்தை சேர்ந்தவர் யுவராஜா (வயது 34), ஓட்டுநர். இவரது மனைவி தீபலட்சுமி. யுவராஜா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிலரிடம் 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கி அந்த பணத்தின் மூலம் புதிய லாரி வாங்கினார். சில மாதங்கள் வரை கடனுக்கு சரியாக வட்டி கட்டி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு யுவராஜாவின் லாரி விபத்துக்குள்ளா னது. அதனை சரி செய்வதற்காக தனியார் கடன் நிறுவனத்தில் யுவ ராஜா கடன் பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக லாரி யில் போதிய அளவில் வருமானம் இல்லை. இதனால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. எனவே தனியார் கடன் நிறுவனத்தினர் லாரியை பறிமுதல் செய்தனர். இதே போல யுவராஜாவிற்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த யுவராஜா வெள்ளிக்கிழமை மூலக்கடை அருகே கணவாய் கரடு மலையடிவாரத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கடமலைக்குண்டு போலீசார் யுவராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் நகராட்சி பகுதிகளில் மஞ்சள் நிறத்தில் குடிநீர் சுத்தமான தண்ணீர் வழங்க வலியுறுத்தல்
விருதுநகர், மார்ச் 11- விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பாத்திமா நகர் பகுதி யில் சனிக்கிழமையன்று வழங்கப்பட்ட குடிநீர் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் இருந்தது. விருதுநகர் நகராட்சி பகுதிக்கு ஆனைக்குட்டம் அணைப் பகுதியில் உள்ள கிணறுகள், கோடை கால நீர்த்தேக்கம், காரிசேரி மற்றும் ஒண்டிப்புலி குவாரிகள், தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவற்றின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆனைக்குட்டம் அணையில் உள்ள தண்ணீரானது உப்பு சுவையுள்ளதாக மாறிவிட்டது. இவை குடிக்க உகந்தது அல்ல என குடிநீர் வடிகால் வாரியம் ஆய்வு மூலம் தெரிவித்துள்ளது. மேலும் ஆனைக் குட்டம் அணைப் பகுதியில் சில கிணறுகளில் உள்ள தண்ணீரும் குடிக்க லாயக்கற்றது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தநிலையில், கோடைகால நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீர், ஆனைக்குட்டத்தில் உள்ள கிணறுகள் மற்றும் தாமிரபரணி குடிநீர் ஆகியவற்றை கலந்து குடியிருப்பு பகுதிகளுக்கு விநியோகம் செய்திட நகராட்சி நிர்வா கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, சனிக்கிழமையன்று காலை பாத்திமாநகர் பகுதியில் உள்ள பிரதான சாலை, மூஞ்சி மாதா கோவில் தெரு, கிருஷ்ணமாச்சாரி சாலை ஆகிய பகுதிகளுக்கு இரு பிரிவுகளாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட தண்ணீரை பொது மக்கள், தங்களது வீடுகளில் உள்ள பாத்திரங்களில் பிடித்தனர். அப்போது தண்ணீரானது மஞ்சள் மற்றும் கருப்பு நிறத் தில் நுரையுடன் வந்ததால் பெரும் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே, உப்பு சுவையுள்ள குடிக்க லாயக்கற்ற குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது இதுபோன்ற நிறங்க ளில் குடிநீரை வழங்கினால் எப்படி பருகுவது என பொது மக்கள் கேளவி எழுப்பியுள்ளனர். எனவே தமிழக அரசு, மாவட்டத் தலைநகரான விருது நகரில் பாதுகாக்கப்பட்ட குடிநீரை விநியோகிக்க வேண்டு மென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நோயால் அவதிப்பட்ட வாலிபர் தற்கொலை
கடமலைக்குண்டு, மார்ச் 11- தேனி உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் முகமது யூசுப் (வயது 30), ஆட்டோ ஓட்டுநர். அவர் கடந்த சில வருடங்களாக வயிற்று வலி மற்றும் மூல நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார் . அதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்று பலனளிக்கவில்லை .இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது யூசப் வருச நாட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு வந்திருந் தார். வெள்ளிக்கிழமை மூலநோய் காரணமாக வயிற்று வலி அதிகமானதால் வருசநாடு சுடுகாட்டில் வைத்து விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார் .அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் முகமது யூசுப் உயிரிழந்தார்.
மதுபோதையில் வலிப்புநோய் வந்து ஒருவர் பலி
கடமலைக்குண்டு, மார்ச் 11- தேனி மாவட்டம், வருசநாடு கிராமத்தை சேர்ந்த வர் ஈஸ்வரன் (வயது 52), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக மனைவி, குழந்தைகளை பிரிந்து வருசநாட்டில் தனியாக வசித்து வந்தார். மனை வியை பிரிந்த பின்னர் ஈஸ்வரன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும் ஈஸ்வரனுக்கு வலிப்பு நோயும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ஈஸ்வரன் வருசநாடு டாஸ்மாக் கடை அருகே தனி யாக அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஈஸ்வரனுக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. அப்போது உதவிக்கு யாரும் இல்லாததால் சிறிது நேரத்தில் ஈஸ்வரன் வலிப்பு நோயால் உயி ரிழந்தார். இதை கண்ட பொதுமக்கள் சிலர் வருச நாடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஈஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.