டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் வலியுறுத்தல் கோவை, டிச.20- அரசு சார்ந்த நிறுவன ஊழியர்கள் என்கிற முறையில் அரசு ஊழியர்களாக அங்கீகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலா ளர்கள் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் குடோனில் பணிபுரியும் சுமைப் பணி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். இறக்கி, ஏற்றும் பெட்டிக்கு ரூ.8 வழங்க வேண்டும். கையா ளும் இழப்புகள் என மாதம் ரூ.20 ஆயிரம் வரை தொழிலாளர்களிடத்தில் பிடித்தம் செய் வதை நிறுத்த வேண்டும். இஎஸ்ஐ, பிஎப் போன்ற சலுகைகளை முறைப்படி வழங்க வேண்டும். ஆண்டு முழுவதும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசு போனஸ் வழங்க வேண்டும்.
அரசு சார்ந்த நிறுவன ஊழியர்கள் என்கிற முறையில் அரசு ஊழியர்களாக அங்கீ காரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழக சிஐடியு டாஸ் மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாயன்று தமிழகம் தழுவிய ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கோவை பீளமேடு டாஸ்மாக் குடோன் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ஜகாங்கீர் தலைமை வகித்தார். சுமைப்பனி தொழிலா ளர் சங்க மாவட்ட பொருளாளர் அபுதாகீர், மாவட்ட துணைத்தலைவர் ஆர்.ராதாகிருஷ் ணன் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர். இதில், நிர்வாகிகள் முபாரக் அலி, முசீபூர் ரஹ்மான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் பங் கேற்றனர். நீலகிரி நீலகிரி மாவட்டம், குன்னூர் எடப்பள்ளி பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் குடோன் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்க தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். ஆர்ப் பாட்டத்தை சுமைப்பணி சங்க நிர்வாகி விஜி துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்ட செயலா ளர் வினோத், மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன் ஆகியோர் ஆர்ப்பாட்ட நோக்கம் குறித்து விளக்கி உரையாற்றினர். இதில், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகேஷ், ஆட்டோ சங்க செயலாளர் யோகேஷ், சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் ரபீக், சுமைப்பணி தொழிலாளர் சங்க நிர்வாகி கள் ரமேஷ், ஈஸ்வர், சுரேஷ், சிவகுமார் ஆகி யோர் கலந்து கொண்டனர். முடிவில், லட்சு மணன் நன்றி கூறினார்.