ஈரோடு, ஜன.28- டாஸ்மாக் ஊழியர்களின் வாழ் வாதார கோரிக்கை மாநாடு சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் ஈரோட்டில் வியாழனன்று நடைபெற்றது. டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கை மாநாடு சிஐடியு சங்கத்தின் சார்பில் ஈரோடு, சூரம்பட்டி நால்ரோடு அருகில் நடை பெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் வி.பாண்டியன் வரவேற் றார். சம்மேளன பொது செயலாளர் கெ.திருச்செல்வன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் எச்.ஸ்ரீராம், துணை தலைவர் என்.முருகையா மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.மாதவன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். மேலும், மாநாட்டில் 2 ஆண்டுக ளில் தொடர்ந்து 480 நாட்கள் பணி முடித்திருந்தால் நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்பது சட் டம். ஆனால் அரசு பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக்கில் ஊழி யர்களை 20 ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தரப்படுத்தாமல் வைத் திருப்பது ஏற்க முடியாது. உதவி விற்பனையாளர்கள், விற்பனையா ளர்கள், மேற்பார்வையாளர் உள் ளிட்ட டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணை யான வகையில் காலமுறை ஊதி யத்தை வழங்க வேண்டும். பார பட்சமான பணியிட மாறுதல் களைக் கைவிட வேண்டும். அடிப் படை தொழிலாளர் நல சட்டங் கள் அமல்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க சம்மேளன துணை பொதுசெயலா ளர் ஏ.ஜான்அந்தோணிராஜ், துணை செயலாளர்கள் கே.செந் தில்பிரபு, பி.மகேஸ், ஒய்.அன்பு மற் றும் சம்மேளனக்குழு உறுப்பினர் கள், கோவை மண்டலத்திற்குட் பட்ட மாவட்ட நிர்வாகிகள், ஊழியர் கள் திராளானோர் கலந்து கொண்ட னர். நிறைவாக ஈரோடு மாவட்ட பொருளாளர் கே.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.