தேனி, ஏப்.24- தமிழக அமைச்சர் பெய ரைச் சொல்லி பணம் கேட்டு கேட்டு மிரட்டுவதாகக் கூறி டாஸ்மாக் மேலாளர் அலு வலகத்தில் டாஸ்மாக் ஊழி யர் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுவிலக்கு மற் றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி யின் பெயரைப் பயன்படுத்தி, கரூரில் இருந்து சிலர் மிரட் டல் விடுவதாக கூறப்படுகி றது. இதைக் கண்டித்து தேனி கருவேல் நாயக்கன் பட்டி யில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவல கத்தில் டாஸ்மாக் ஊழியர் கள் உள்ளிருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். அங்கி ருந்த அலுவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்ற னர். முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர். இது தொடர்பாக டாஸ் மாக் ஊழியர்கள் சங்கங்க ளின் கூட்டுக்குழு நிர்வாகி மோகன் கூறுகையில், அமைச் சர் பெயரைச் சொல்லி டாஸ்மாக் கடைகளில் விற்ப னைத் தொகையில், சதவீத அடிப்படையில் பணம் கேட் கின்றனர். பணம் கொடுக் காத கடைகளை அடைக்கச் சொல்லி ஊழியர்களை மிரட்டுகின்றனர். அமைச்சர் பெயரைச் சொல்லி மிரட்டும் வடிவேல், சதீஷ் உள்ளிட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யெனில் அடுத்த கட்டமாக டாஸ்மாக் கடைகளை அடைத்து விட்டு ஊழி யர்கள் போராட்டத்தில் ஈடு படுவார்கள் என்றார்.