இராஜபாளையம் மேற்கு ஒன்றியம் முகவூர் மெயின்ரோட்டில் செல்லும் தாமிரபரணி குடிதண்ணீர் குழாய் உடைந்துள்ளதை சரிசெய்ய வேண்டும். மக்களுக்கு சரியான முறையில் குடிதண்ணீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜானகிராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆ.குருசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.இராமர் ,ஒன்றிய செயலாளர் எஸ்.சந்தனகுமார், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் பொன்னுத்தாய், டி.நீராத்திலிங்கம் ஆகியோர் பேசினர்.