மானாமதுரையில் புதிய பேருந்துகளை தமிழரசி எம்எல்ஏ துவக்கி வைத்தார்
சிவகங்கை, செப்.27- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு புதிய பேருந்துகளை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் தொடங்கி வைத்தார். மானாமதுரை குவளைவேலிக்கு கட்டிக்குளம் வழி யாக நகர பேருந்து இருமுறை இயக்கும் ஏற்பாடு உள்ளது. சிவகங்கையில் இருந்து மதியம் 3 மணிக்கு புதுக்குளம் வழியாக வேம்பத்தூர் வழியாக திருப்பாச் சேத்திக்கும் திருப்பாச்சேத்தியில் இருந்து மாலை 3:55 மணிக்கு சிவகங்கைக்கும், பரமக்குடியிலிருந்து முனைவென்றிக்கு மேலநெட்டூர் வழியாக காலை 7. 25 மணிக்கும் செல்கிறது முனைவென்றியிலிருந்து காலை 8:25 மணிக்கு திரும்புகிறது. இந்த பேருந்து மேல நெட்டூர் வழியாக செல்கிறது. இப் பேருந்துகளை மானாமதுரை சட்டமன்ற உறுப்பி னர் தமிழரசி ரவிக்குமார் தொடங்கி வைத்தார். இவ்விழா வில் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லதாஅண்ணாத்துரை, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், திமுக நகர் செயலாளர் பொன்னுச் சாமி, அரசு போக்குவரத்துக் கழக கோட்டமேலாளர், கிளை மேலாளர் ராஜ்குமார், மாங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் தேசிங்கு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஒரே பெயரில் இரண்டு ஊர்கள் பொதுமக்கள் குழப்பம்-அவதி
சின்னாளபட்டி செப் 28- வத்தலகுண்டுவிலிருந்து திண்டுக்கல் செல்லும் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே லட்சுமிபுரம் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்தில் சித்தையன் கோட்டை அருகே நெடுஞ்சாலையில் மற்றொரு லட்சுமிபுரம் கிராமம் உள்ளது.வெளியூரிலிருந்து இருந்து வருபவர்கள் வத்தலகுண்டு அருகில் உள்ள லட்சுமி புரத்தில் இறங்குவதற்கு பதிலாக சித்தையன் கோட்டை அருகில் உள்ள லட்சுமிபுரத்தில் இறங்கி விடுகின்றனர். பிறகு, தான் இறங்க வேண்டிய ஊர் இது இல்லை என்பதை அறிந்ததும் மறுபடியும் பேருந்தில் ஏறி வத்தலகுண்டு அருகில் உள்ள லட்சுமிபுரத்திற்கு செல்கின்றனர். இதுபோன்று பலர் அவதிப்படுகின்றனர். ஆகையால் சித்தையன் கோட்டை அருகே உள்ள லட்சுமி புரத்துக்கு சித்தையங்கோட்டையை குறிக்கும் வகையில் எஸ் .லட்சுமிபுரம் என்றும் வத்தலக்குண்டு அருகில் உள்ள லட்சுமிபுரத்துக்கு வி.லட்சுமிபுரம் என்றும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் அமைப்பு உருவாக்கம்
மதுரை, செப் 28- மதுரை மாவட்ட மக்களைத்தேடி மருத்துவ ஊழியர் கள் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கான அமைப்புக்கூட்டம் செப்டம்பர் 28 புதனன்று அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் பழனீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ். கிருஷ்ண மூர்த்தி, மாநிலச் செயலாளர் இரா. தெய்வராஜ் ஆகி யோர் பேசினர். மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. லெனின், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. அரவிந்தன், தலைவர் கண்ணன், பொருளாளர்கள் ஜி. கௌரி, ஜே. லூர்து ரூபீ, சங்கத்தின் மாநிலச் செயலாளர் டி. லெட்சுமி, மாநில பொருளாளர் எம். மலர்விழி ஆகியோர் பேசினர். தொடர்ந்து மதுரை மாவட்ட மக்களைத்தேடி மருத்துவ ஊழியர் அமைப்பு உருவாக்கப்பட்டது.இதன் தலைவ ராக ஏ. பழனீஸ்வரி, செயலாளராக எஸ்.புவனேஸ்வரி, துணைத் தலைவர்களாக காவ்யா, சோனியா, துணைச் செயலாளர்களாக மைதிலி தேவி, ஜெகதீஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தாயைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை
விருதுநகர், செப்.28- விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் அருணாசல பாண்டியன் (37). இவர் தனது தாய் ஈஸ்வரியிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுக்கவே, ஆத்திரத்தில் தாய் என்றும் பாராமல் அவரைக் கொலை செய்தார். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து அருணாசலபாண்டியனை கைது செய்தனர். இந்த வழக்கானது, திருவில்லிபுத்தூர் மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி அருணாசலபாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
அரசு இராஜாஜி மருத்துவமனை விரிவாக்க கட்டிடத்திற்கு குடிநீர் விநியோகம் துவக்கம்
மதுரை, செப்.28- மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு மதுரை மாநகராட்சியின் மூலமாக ஏற்கனவே குடிநீர் விநியோ கம் செய்யப்பட்டு வருகிறது . தற்போது மருத்துவமனை கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது. கூடுதல் கட்டிடத்திற்கு வரும் பொதுமக்கள், உள் மற்றும் வெளிநோயாளிகள் , பணியாளர்கள் , அலு வலர்கள் அனைவருக்கும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் மதுரை மாநகராட்சி இராஜாஜி பூங்கா அருகில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியிலி ருந்து செவ்வாயன்று முதல் குடிநீர் வழங்கப்படுகிறது. இராஜாஜி பூங்கா அருகில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியிலிருந்து அரசு இராசாசி மருத்துவமனை கூடுதல் கட்டிடத்திற்கு ரூ .16.50 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 1200 மீட்டர் நீளத்திற்கு 90 எம்.எம் . சி.ஐ.குழாய்கள் பதிக்கப் பட்டு குடிநீர் விநியோகம் செய்வதற்கு பணிகள் முடிக் கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு இராசாசி மருத்துவ மனைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட உள்ளது . மேலும் குடிநீர் விநியோகம் முறை யாக செல்வதற்கு 90 எம்.எம் . விட்டமுள்ள வால்வு ஒன்றும், குடிநீர் மீட்டர் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது இதனை மேயர் வ. இந்திராணி தொடங்கி வைத்தார் . இந்நிகழ்வில் ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், துணை மேயர் தி.நாக ராஜன், நகரப்பொறியாளர் லெட்சுமணன், மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, அரசு இராசாசி மருத்துவ மனை மருத்துவ அலுவலர் மரு.ரவீந்திரன் உதவிப்பொ றியாளர் சந்தனம்உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை - திண்டுக்கல் ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு
மதுரை, செப்.28- மயிலாடுதுறை - திண்டுக்கல் இடையே ஒரு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலையும் மதுரை செங்கோட்டை ரயிலையும் ஒன்றாக இணைத்து ஒரே ரயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோ பர் 24 முதல் மயிலாடுதுறை - திண்டுக்கல் - மயிலாடு துறை விரைவு ரயில்கள் (16847/16848) மற்றும் மதுரை - செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் (06665/06662) ஆகிய இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே ரயிலாக புதிய ரயில் எண்களு டன் இயக்கப்படும். அதன்படி மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில் (16847) மயிலாடுதுறையிலிருந்து காலை 11.30 மணி க்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும். மறு மார்க்கத்தில் செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் (16848) செங்கோட்டையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மாலை 05.10 மணிக்கு மயிலாடு துறை சென்று சேரும். இந்த ரயில்கள் குத்தாலம், ஆடு துறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர் மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், பாம்ப கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலை யங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 12 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்புடன் கூடிய சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும். பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் கோவில்பட்டி அருகே குமாரபுரம் ரயில் நிலைய ரயில் பாதை பராமரிப்பு பணிகளுக்காக செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை பாலக்காடு - திருச்செந்தூர்- பாலக்காடு விரைவு ரயில்கள் (16731/16732) கோவில் பட்டி மற்றும் மதுரை - திருச்செந்தூர் இடையே பகுதி யாக ரத்து செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக் கப்பட்டிருந்தது. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படுவதால் பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில்கள் செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை வழக்கம்போல் இயங்கும் என்று தென்னக ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.30 லட்சம் மோசடி முன்னாள் இராணுவ வீரர், பெண் காவலர் மீது புகார்
மதுரை, செப் 28- இந்திய ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த முன்னாள் இராணுவ வீரர் மற்றும் பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்தில் இளைஞர்கள் புகார் தெரிவித்தனர். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கூடலிங்கம் மற்றும் மதுரை ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் அவரது மனைவி கார்த்திகை செல்வி ஆகியோர், அவர்களுக்கு தெரிந்த நண்பர்கள் சிலரிடம் ஒன்றிய அரசில் வேலை வாங்கித்தருவதாக தெரி வித்துள்ளனர். அதன்படி, கடந்த 2019 மே மாதம் விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 7 இளைஞர்களிடம் வடகிழக்கு இந்தியன் ரயில்வேயில் டிராக் மேன் (Track man) வேலையும், வன அதிகாரி (Forest Guard) வேலை யும் வாங்கித்தருவதாக கூறி தலா 4 முதல் 6 லட்சம் ரூபாய் வரை என மொத்தம் சுமார் 32 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளனர். பின்னர் பணி ஆணைக்கான ஆவணங்களை போலி யான அரசு முத்திரையுடன் தயாரித்து இளைஞர்களிடம் வழங்கினர். 2019 செப்டம்பரில் அனைவரையும், பயிற்சி அளிப்பதாகக் கூறி உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் மூன்று மாத காலம் தங்க வைத்துள்ளனர். ஆனால், பயிற்சியோ ,ஊக்கத் தொகையோ எதுவும் அளிக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்தவர்கள் விசாரித்தனர்.அப்போது அனைத்தும் போலி என்பதும் தாங்கள் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்த இளைஞர்கள் கொடுத்த பணத்தை கேட்ட போது, மிரட்டியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புதனன்று மதுரை யில் தென்மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
கூலி உயர்வு-தீபாவளி போனஸ் வழங்க அப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை
மதுரை, செப் 28- பல வருடங்களாக உயர்த்தப்படாமல் உள்ள கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்.தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை மாவட்ட சிஐடியு அப்பளத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அப்பள வியாபாரிகள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் மனு அளிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்றுக்குப்பின் விலைவாசி மற்றும் வீட்டு வரி, மின் கட்டணம் , கேஸ் விலை உயர்வு, அனைத்து உணவுப் பொருட்களும் விலை உயர்ந்து வரும் நிலையில் அப்பளத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தப்படவில்லை. தற்போது விலைவாசி உயர்வால் தொழிலாளர்கள் பெரும் பொருளாதார நெருக்கடியினை சந்தித்து வருகிறார்கள். இதனால் கடன் சுமைக்கு அப்பளத் தொழிலாளர்கள் தள்ளக் கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே அப்பள தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரி கள் அப்பளத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வுக்கான பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி செப்டம்பர் 28 புதனன்று சிஐடியு அப்பள தொழிலாளர் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட செயலாளர் எம்.பாலமுருகன். அப்பள தயாரிப்பா ளர்கள் மற்றும் வியாபாரிகளிடம் மனு அளித்தார்.