districts

img

கேபிள் டிவி ஒளிபரப்பை தமிழகமே தொடர வேண்டும்

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வலியுறுத்தல் மதுரை, டிச.12-  தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்  கள் பொதுநல சங்கம் சார்பில் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகில் மாநிலப் பொதுச் செய லாளர் எஸ். வெள்ளைச்சாமி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது  ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த மாநிலச்செயலாளர் வெள்  ளைச்சாமி  செய்தியாளர்களிடம் கூறுகையில். “ஒன்றிய அரசு நாடு முழுவதும் டிஜிட்டல் மயத்தை அமல்படுத்தியுள்ளது. கேபிள் ஒளி பரப்பில் அனலாக் முறையை நிறுத்திவிட்டது ஆனால், அனலாக் முறைக்கு பணம் கட்ட வேண்டும் என்று  நோட்டீஸ் அனுப்பப்பட்டு தற்  போது ஜப்தி நடவடிக்கை வரை  வந்துள்ளது இந்த நடவடிக்கை யை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக அரசு கேபிள் டிவி நடத்து வதற்கு அதிகாரம் இல்லை என்று ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது அதில், 2023 டிச. 31-ஆம் ஒளிபரப்பு நிறுத்தப்படும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அச்  சத்துடன் தொழில் நடத்த வேண் டிய நிலை உருவாகியுள்ளது. தொடர்ந்து கேபிள் டிவி ஆப ரேட்டர்கள் கேபிள் டிவி நடத்துவ தற்கு உரிய ஏற்பாடுகள் என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றார். மேலும் அவர் கூறுகையில், கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் நல வாரியத்தை தமிழக அரசு செயல் படுத்த வேண்டும். தமிழகத்தில 31 லட்சம் செட் ஆப் பாக்ஸ்கள் பொதுமக்களுக்கு இலவசமாக  கொடுக்கப்பட்டது. தற்போது அவை பழுதடைந்து விட்டது. வீடு மாற்றம் செய்துள்ளவர்களிடம் அதைப் பெற்றுக் கொடுக்க வேண்  டும் என அதிகாரிகள் நிர்ப்பந்தம் செய்கின்றனர். இந்தப் பிரச்சனை யில் தமிழக முதல்வர் தலையிட வேண்டுமென்றார். மதுரை மாவட்டத் தலைவர் எஸ்.குமரேசன், மாவட்டச் செய லாளர் பி.சுரேஷ்,   மாவட்டப் பொரு ளாளர் பி.மாயழகன் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர். இந்தச் சூழலில் மதுரையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை தலைமையகமாகக் கொண்ட ஜிடி பிஎல் நிறுவனத்தின் செட் ஆப்  பாக்ஸ்கள் பொருத்தப்பட்டு வரு கின்றன தமிழக அரசு இதில் கவனம் செலுத்தவேண்டுமென்கின்றனர் விஷயமறிந்த கேபிள் டிவி ஆப் ரேட்டர்கள்.