மதுரை மாவட்டத்தில் டிசம்பர் 20 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.இராஜா (தாம்பரம்) தலைமையில், குழு உறுப்பினர்கள் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார்கள். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி) ஆ.தமிழரசி (மானாமதுரை), கோ.தளபதி (மதுரை வடக்கு), .வி.பி.நாகை மாலி (கீழ்வேளூர்) , எஸ்.எஸ்.பாலாஜி (திருப்போரூர்) , ரூபி.ஆர்.மனோகரன் (நாங்குநேரி) மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், சட்டமன்றப் பேரவை இணைச் செயலாளர் செ.பாண்டியன், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், துணைமேயர் தி.நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.