districts

img

ஊழல் புகாரின் பேரில் நடவடிக்கை இல்லை சுருளிப்பட்டி ஊராட்சி உறுப்பினர்கள் ராஜினாமா

தேனி, அக்.31- ஊராட்சித் தலைவர் மீதான ஊழல், முறைகேடு புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண் டித்து கம்பம் ஒன்றியம், சுருளிப்பட்டி  ஊராட்சியை சேர்ந்த 11 உறுப்பினர்கள் தங்க ளது ராஜினாமா கடிதத்தை தேனி ஆட்சி யர் அலுவலகத்தில் வழங்கினர். கம்பம் ஊராட்சி ஒன்றியம் சுருளிப் பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக நாக மணி இருந்து வருகிறார் .இவர் மீது ஊராட்சி உறுப்பினர்கள் ஊழல் மற்றும் முறைகேட் டில் ஈடுபட்டதாக தேனி ஆட்சியர் அலுவல கத்தில் பல முறை புகார் அளித்துள்ளனர். எனினும் இது வரை நடவடிக்கை எடுக்க வில்லை. ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்  பினர்கள் அறிவு, சிவானந்தி உள்ளிட்ட 11 பேர் திங்களன்று தேனி ஆட்சியர் அலுவல கத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் முரளியை சந்தித்து ராஜினாமா கடி தத்தை அளித்தனர்.