districts

img

முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக்குழுவினர்

தேனி, அக்.13- முல்லைப்பெரியாறு அணையில் வியாழனன்று துணை கண்காணிப்புக்குழு வினர் ஆய்வு மேற்கொண்ட னர். முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதிமன்றம் மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல் சன்ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழுவை அமைத்தது. இக்குழுவிற்கு உதவியாக துணை கண்கா ணிப்புக்குழு அமைக்கப் பட்டது. அதன் தலைவராக கொச்சியிலுள்ள மத்திய நீர் வள ஆணைய செயற்பொறி யாளர் சரவணக்குமார் உள் ளார். தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம்இர்  வின், உதவி செயற்பொறியா ளர் குமார், கேரள பிரதி நிதிகளாக கட்டப்பனை நீர்ப் பாசன செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறி யாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர். தற்பாது அணையின் நீர்மட்டம் 127.55 அடியாக உள்ள நிலையில் வட கிழக்குப் பருவமழையும் தொடங்க உள்ளது. இதற்  காக அணையில் செய்யப் பட வேண்டிய வழக்கமான பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணைக்கண்காணிப்பு குழு வினர் அணையை ஆய்வு செய்தனர். அணையின் 3,7 மற்றும்  9-வது மதகுகள் இயக்கிப் பார்க்கப்பட்டன. இதில் மதகு களின் இயக்கம் சீராக இருப்  பது தெரிய வந்தது. கசிவு நீரை சோதனை செய்ததில் நிமிடத்திற்கு 19.02 லிட்டர் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 127.55 அடிக்கு  இந்தளவுக்கு கசிவுநீர் இருக்க வேண்டும். இதன் மூலம் அணை பலமாக இருப்பது தெரிய வந்துள்ளது என்று தெரிவித்தனர். தொடர்ந்து பேபிஅணை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து துணைக்குழுவின் ஆலோ சனைக் கூட்டம் குமுளி யிலுள்ள கண்காணிப்பு குழு வின் அலுவலகத்தில் நடை பெற்றது.  இதில் வல்லக்கடவு பாதையை சீரமைக்க வேண் டும். பேபி அணையை சீர மைப்பதற்கு கேரள வனத்  துறை தொடர்ந்து இடை யூறு அளித்து வருகிறது. இதனை சரி செய்ய வேண்  டும் என்று தமிழக அதிகாரி கள் குழுத் தலைவரிடம் மனு அளித்தனர்.