மதுரை, பிப்.22- செயற்கைக்கோள் தயாரிப் பில் பங்களிப்பு செய்த திருமங்கலம் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பெண் குழந்தைகள் மூலம் புது முயற்சியாக காஷ்மீர் முதல் கன்னி யாகுமரி வரை உள்ள பள்ளிகளில் 75 பள்ளிகளை தேர்வு செய்து ஒரு பள்ளிக்கு 10 பேர் வீதம் மொத்தம் 750 மாணவியர்களைக் கொண்டு ஆசாதி செயற்கைக்கோள் உரு வாக்க சென்னையை சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா -2021 டிசம்பர் மாதம் முதல் பணியை ஆரம்பித்தது. இப்பணியில் தமிழ்நாட்டில் இருந்து இரண்டு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் ஒன்று. அனைத்து மாணவர்களின் பணியையும் ஒருங்கிணைத்து ஆசாதி சாட்-1 ல் பொருத்தப்பட்டு எஸ்எஸ்எல்வி (SSLV) ராக்கெட் மூலம் 2022 ஆகஸ்ட் மாதம் ஏவப் பட்டது. ஆனால் ராக்கெட் சரியான பாதையில் செல்லாததால் தோல் வியில் முடிந்தது. 2022 டிசம்பர் மாதம் மீண்டும் ஆசாத் சாட் பணி யை மேற்கொள்ள ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அனுமதி வழங்கியது. இதனை அடுத்து ஒரு மாத காலத் திற்கு உள்ளாகவே திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தங்களது பணியை வெற்றிகரமாக முடித்து அனுப்பி னர். இது ஆசாதி சாட் -2 இல் பொருத் தப்பட்டு எஸ்எஸ்எல்வி-2 (SSLV) ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. முன்னுதாரணமான பணி யினை செய்துள்ள திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி களையும், ஊக்கமளித்த ஆசிரி யர்களையும் செவ்வாயன்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது அலு வலகத்திற்கு அழைத்து பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தார். வட்டார கல்வி அலுவலர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புற நகர் மாவட்டச் செயலாளர் கே. இராஜேந்திரன் ஆகியோர் உட னிருந்தனர்.